News March 18, 2024
மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா

உதகை அருகே உல்லாடா கிராமம் உள்ளது . இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Similar News
News August 8, 2025
எஸ்பி தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 20 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மகனுக்காக வழங்கினார்கள்.
News August 8, 2025
பழங்குடி மக்களின் குறைகளை கேட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சிப்பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.2.98 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
News August 8, 2025
குடியிருப்பு கட்டிட பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சிப்பகுதியில் வடவயல் பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நகர் குடியிருப்புக்கான கட்டட மற்றும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.