News August 25, 2024
100 ஆண்டுகளுக்கு பிறகும் மாரி செல்வராஜ் படங்கள் பேசப்படும்

100 ஆண்டுகளுக்கு பிறகும் மாரி செல்வராஜின் படங்கள் பேசப்படும் என்று திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார். தனியார் டிவி சார்பில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான மகுடம் விருது மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை விசிக தலைவர் திருமாவளவனுடன் சேர்ந்து மிஷ்கின் வழங்கினார். அப்போது பேசிய மிஷ்கின், அவரின் வாழ்வில் கண்ட வலிகளையே மாரி செல்வராஜ் படமாக்குவதாக புகழ்ந்தார்.
Similar News
News December 9, 2025
இண்டிகோ பிரச்னை எப்போது தீரும்? அமைச்சர் விளக்கம்

இண்டிகோ பிரச்னை சீராகி வருவதாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், விமானங்களின் ரத்து, தாமதம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், விரைவில் நிலைமை முழுவதும் சீராகும் என்றும் குறிப்பிட்டார். விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், ரீபண்ட், பேகேஜ்களை வழங்குவது, பயணிகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
News December 9, 2025
விஜய் குறிப்பிட்ட ‘வகையறா’ என்றால் என்ன?

தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்து பார்க்கும் ‘வகையறா’ நாம் அல்ல என விஜய் இன்று பரப்புரையில் பேசியிருந்தார். இந்த வகையறா என்ற சொல், பெருமளவில் தென்மாவட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு வம்சம், குலதெய்வ வழிபாடு முதலியவற்றின் அடிப்படையில் வகையறா என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் அகராதியின்படி, வகையறா என்றால் முதலியன, தொடர்புடையவர்கள் என்றும் பொருள்படும்.
News December 9, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிய விஜய்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். மத்திய அரசுக்கு இருப்பதுபோல் தமிழகம் தனி மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வேறுபாடு தனக்கு கிடையாது என விஜய் கூறியுள்ளார். மக்கள் சந்திப்பில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக தீர்மானம் அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.


