News August 25, 2024
100 ஆண்டுகளுக்கு பிறகும் மாரி செல்வராஜ் படங்கள் பேசப்படும்

100 ஆண்டுகளுக்கு பிறகும் மாரி செல்வராஜின் படங்கள் பேசப்படும் என்று திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார். தனியார் டிவி சார்பில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான மகுடம் விருது மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை விசிக தலைவர் திருமாவளவனுடன் சேர்ந்து மிஷ்கின் வழங்கினார். அப்போது பேசிய மிஷ்கின், அவரின் வாழ்வில் கண்ட வலிகளையே மாரி செல்வராஜ் படமாக்குவதாக புகழ்ந்தார்.
Similar News
News November 9, 2025
திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது: EPS

TN-ல் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என EPS குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 54 மாத DMK ஆட்சியில் போலீஸ் தனது கம்பீரத்தை இழந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். திமுகவின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை TN மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருவதாகவும், தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் சாடியுள்ளார்.
News November 9, 2025
சிசேரியன் காயம் வேகமாக ஆற TIPS!

கர்ப்ப காலத்தில் எப்படி உடல்நலத்தை பேணி காத்தீர்களோ அதைவிட கவனமாக குழந்தை பிறந்த பின் பார்த்துக்கொள்ள வேண்டும் ➤ஆரஞ்சு, நெல்லி, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் ➤பருப்பு, மீன், சிக்கன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள் ➤சருமம் பழையபடி மாற தேவையான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம் ➤தினம் ஒரு கீரை, நட்ஸ் வகைகளை எடுத்துக்கொண்டால் சிறப்பு. தாய்மார்களுக்கு SHARE THIS.
News November 9, 2025
டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாறுகிறது

பருவமழை முடியும் வரை டாஸ்மாக் கடைகளை 1 மணி நேரம் முன்னதாக மூட அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, மதியம் 12 – இரவு 10 மணி வரை கடைகள் திறக்கப்படுகின்றன. மழை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுவதால் கடை மூடும் நேரத்தை குறைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையின் சூழலுக்கேற்ப கடைகளை சீக்கிரம் மூட சில மாவட்ட நிர்வாகங்களும் அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


