News August 25, 2024

100 ஆண்டுகளுக்கு பிறகும் மாரி செல்வராஜ் படங்கள் பேசப்படும்

image

100 ஆண்டுகளுக்கு பிறகும் மாரி செல்வராஜின் படங்கள் பேசப்படும் என்று திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார். தனியார் டிவி சார்பில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான மகுடம் விருது மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை விசிக தலைவர் திருமாவளவனுடன் சேர்ந்து மிஷ்கின் வழங்கினார். அப்போது பேசிய மிஷ்கின், அவரின் வாழ்வில் கண்ட வலிகளையே மாரி செல்வராஜ் படமாக்குவதாக புகழ்ந்தார்.

Similar News

News December 8, 2025

வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2014-ல் ₹62-ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது ₹90-க்கும் கீழ் சென்றுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், இறக்குமதி பொருள்களின் விலையில் எதிரொலிக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, மின்னணு பொருள்கள், செல்போன், லேப்டாப், மருந்துகள், கார்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

News December 8, 2025

புடினை தொடர்ந்து இந்தியா வரும் ஜெலன்ஸ்கி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விசிட்டில் PM மோடி அவரிடம் உக்ரைன் உடனான போர் குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து ஜெலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதால், உக்ரைன் தரப்பு கோரிக்கைகளை PM கேட்டறியலாம். இதன்பிறகு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

News December 8, 2025

ஸ்டாலினின் இந்து மத வெறுப்பு: வானதி

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது ஆழ்மனதில் இருக்கும் இந்து மத வெறுப்பை ஸ்டாலின் வெளிப்படுத்துகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என 1920-ல் இருந்தே நீதிமன்றத்தில் உரிமை போராட்டம் இருந்து வருவதாக கூறிய அவர், அப்போது பாஜகவும் இல்லை, RSS-ம் இல்லை என தெளிவுப்படுத்தியிருக்கிறார். அத்துடன், 1920-ல் நடந்ததை CM அரசியல் என்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!