News March 4, 2025

மார்ச் 4: வரலாற்றில் இன்று

image

*1924 – தமிழ் தேசிய போராளி புலவர் கு. கலியபெருமாள் பிறந்தநாள். *1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்கள் உப்பை பயன்படுத்தவும் பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் வூட் – மகாத்மா காந்தி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. *1938 – விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிறந்தநாள். *தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்.

Similar News

News March 4, 2025

தமிழிசைக்கு பதிலடி கொடுத்த CM ஸ்டாலின்

image

பிறந்தநாளுக்கு மும்மொழிகளில் வாழ்த்து தெரிவித்த தமிழிசைக்கு, தனக்கு தெலுங்கு தெரியாது எனக் கூறி CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தெலங்கானா ஆளுநராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை தமிழிசை அறிந்திருப்பதாக கூறிய அவர், இதிலிருந்தே 3ஆவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்பட்டால் அதனை புரிந்துகொண்டு பயன்படுத்தலாம் என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

News March 4, 2025

பிரபல கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் காலமானார்

image

மும்பை அணியின் Ex கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் (84) உடல்நலக்குறைவால் காலமானார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 20 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடியவர். குறிப்பாக 1972இல் தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி பட்டம் வெல்ல உதவியவர். மும்பை கிரிக்கெட் ஒரு உண்மையான ஜாம்பவானை இழந்துவிட்டது என MCC தலைவர் அஜிங்க்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

image

சிறுநீரில் உள்ள சில ரசாயனங்கள் வெளியே செல்வதற்குப் பதிலாக உடலில் தங்கி, அவை படிமங்களாக மாறி பின்னர் கற்களாக மாறுகின்றன. மேலும், அசைவம் அதிகமாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணத்தினாலும் கல் உண்டாகலாம். அத்துடன் தூக்கமின்மை, லேட்டாக சாப்பிடுவது, வைட்டமின் B6, C, D குறைபாடுகளுடன் உடல் பருமன் இருப்பவர்களுக்கும் கிட்னியில் கல் ஏற்படுகிறது. அதிகமாக தண்ணீர் குடியுங்கள்!

error: Content is protected !!