News March 24, 2025
மார்ச் 24: வரலாற்றில் இன்றைய தினம்

*1947- மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலானார். *1988 – பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்த நாள். *1993 – ஷூமேக்கர்- லேவி வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. *காங்கிரஸ் கட்சி உறுப்பினரல்லாத, முதல் பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1977) *பூடான் மக்களாட்சிக்கு மாறியது. முதல் பொதுத் தேர்தல் நடந்தது (2008) *2020 – கொரோனா வைரஸ்: இந்தியாவில் முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.
Similar News
News March 26, 2025
பெண்கள் அதிகம் வேலை செய்யும் மாநிலம் எது?

ஒப்பந்த தொழில்களில், பெண்கள் அதிகம் வேலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா (28.7%) முதலிடத்திலும், தமிழ்நாடு (14.2%) இரண்டாவது இடத்திலும் இருப்பது TeamLease நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் பெண்கள் விகிதம் 19% குறைந்துள்ளது. 46% பெண்கள் தொடக்கநிலை ஊழியர்களாக இருப்பதாகவும், வேலைவாய்ப்பின்மை 2.9%லிருந்து 3.2% அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
News March 26, 2025
அமித் ஷாவுடன் 2 மணிநேரமாக இபிஎஸ் பேச்சு!

டெல்லிக்கு இன்று சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இரவு 8 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, 2 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. முதலில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருடன் அமித் ஷாவை சந்தித்த இபிஎஸ், தற்போது தனியாக அவருடன் பேசி வருகிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பு 2 மணி நேரமாகவா நீடிக்கும் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
News March 26, 2025
ரேஷன் அட்டைதாரர்களே.. உடனே பண்ணுங்க

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் கை ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் அட்டை ரத்தாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக கை ரேகைப் பதிவு நடைபெற்று வந்தாலும், இன்னும் பலர் பதிவு செய்யாமல் உள்ளனர். இதனையடுத்து, வரும் 31ஆம் தேதி அதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் ரேகை பதிவாகியிருக்கிறதா என்று செக் பண்ணிக்கோங்க.