News March 23, 2025
மார்ச் 23: வரலாற்றில் இன்று!

*1931 –காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். *1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது. *1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர். *1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. *உலக வானிலை நாள்
Similar News
News March 24, 2025
17 வயது சிறுவனை 30 முறை வன்கொடுமை செய்த பெண்!

ஜெயிலில் 17 வயது சிறுவனை, 47 வயது பெண் டாக்டர் ஒருவர் 30 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. USAவின் ஸ்டேடன் தீவில் உள்ள சிறையில் ‘தெரபி’ என்ற பெயரில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர் புகார் அளிக்க, அந்த டாக்டர் மாயா ஹேய்ஸ் கைதாகி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை போலும்..
News March 24, 2025
காலை எழுந்ததும் இவற்றை பார்த்திடவே கூடாது..!

காலை எழுந்தவுடன் இந்த 4 விஷயங்களை பார்க்காதீர்கள் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. நிழல்: இது அசுபம் எனப்படுகிறது *அழுக்கு பாத்திரங்கள்: அழுக்கு பாத்திரங்களை பார்த்தால், பண இழப்பு ஏற்படுமாம் *ஓடாத கடிகாரம்: இது வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுத்துமாம் *கண்ணாடி: காலையில் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருந்தால், உடனே நிறுத்தி விடுங்கள். இது எதிர்மறை ஆற்றலை உண்டாக்குமாம்.
News March 24, 2025
காலையில் பெண்கள் பால் வாங்க வருவதில்லை

அதிகாலையில் பால் வாங்க வரும் பெண்களுக்கு ‘கல்ப்ரிட்ஸ்’ தொல்லை உள்ளதால், பால் விற்பனை நேரம் மாற்றப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பால் முகவர்கள் சங்கம், பெண்கள் அதிகாலை நேரத்தில், ஆவின் பூத்திற்கு பால் வாங்க வருவது அபூர்வமானது. இதை ராஜகண்ணப்பன் அறியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. எனவே, சரியான தகவல்களை ஆராய்ந்து, அவர் பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.