News March 18, 2024
மரக்காணம்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

மரக்காணம் நடுகுப்பத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின்போது பிரச்னை ஏற்பட்டதால் திருவிழா நடத்த காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில் நேற்று(மார்ச் 17) ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி காவல்துறை மீண்டும் திருவிழா நடத்த அனுமதிக்கவில்லை என்றால், தேர்தலை புறக்கணித்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக முடிவு செய்தனர்.
Similar News
News December 3, 2025
விழுப்புரம் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் 74-விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பதிவு அலுவலர் தலைமையில் (டிச.03) இன்று அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு SIR-2026 தொடர்பான கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தோ்தல் அலுவலா்கள்,கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News December 3, 2025
தளவானூர் அணைகட்டில் ஆட்சியர் ஆய்வு

கோலியனூர் ஒன்றியம் தளவானூர் அணைகட்டில் நீர்வளத்துறை சார்பில் மாநில நிதி திட்டத்தின் கீழ் அணைகட்டு புணரமைப்பு பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை ஆட்சியார் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி. உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் கபிலன் கலந்துகொணடனர்.
News December 3, 2025
விழுப்புரம்:வீடூர் அணையில் குளிக்க அனுமதி இல்லை!

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் அணையில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் யாரும் அணையில் குளிக்கவும் இறங்கவோ அனுமதி இல்லை என நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் அருகாமையில் அதற்கான எச்சரிக்கை பலகையும் இன்று (டிச.03) நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.


