News March 18, 2024
மரக்காணம்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

மரக்காணம் நடுகுப்பத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின்போது பிரச்னை ஏற்பட்டதால் திருவிழா நடத்த காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில் நேற்று(மார்ச் 17) ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி காவல்துறை மீண்டும் திருவிழா நடத்த அனுமதிக்கவில்லை என்றால், தேர்தலை புறக்கணித்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக முடிவு செய்தனர்.
Similar News
News September 18, 2025
நலமான பெண்கள் வளமான குடும்பம் மருத்துவ முகாம்

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று முதல் அக்டோபர் 2 ஆம் தேதிவரை ‘நலமான பெண்கள் வளமான குடும்பம்’ என்ற சிறப்பு மருத்துவ முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சிறுவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இன்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கலந்து கொண்டு மகளிருக்கு சுகாதார பெட்டகங்களை வழங்கினார்.
News September 18, 2025
மலை குன்றில் சாராயம் காய்சியவர் கைது

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோ.குப்பம் கிராமம் நந்தன் கால்வாய் அருகே மலை குன்றில் சாராயம் காய்ச்சுவதற்காக 20 லிட்டர் அளவு கொண்ட ஊரல்களும், 2 லிட்டர் சாராயம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை வைத்திருந்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை போலீசார் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
News September 18, 2025
மின்மாற்றியை இடம் மாற்றிய போலீசார்: பாராட்டிய எஸ்.பி

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வேறு இடத்துக்கு மாற்றி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவலர்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.