News April 29, 2025
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மாவோயிஸ்டுகள்

பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர். மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் ‘ககர்’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும்படியும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இது பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள 2-வது கடிதமாகும்.
Similar News
News November 28, 2025
திருப்பத்தூர்: பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக பாட்டிக்கு விபூதி!

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி வசந்தா (66), கட்டிட தொழிலாளி. இவரது பேரன் பிரசாந்த் (20) என்பவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக வேப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவர் 5 பவுன் நகையை வசந்தாவிடம் பெற்றுக்கொண்டு டிமிக்கி காட்டியுள்ளார். புகாரின் பேரில் பிரவீன் கைது செய்யப்பட்டார்.
News November 28, 2025
தேர்வு இல்லாமல் மத்திய அரசில் 156 வேலைவாய்ப்பு!

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஃபிட்டர், உள்ளிட்ட 156 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI. மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.8. இங்கே <
News November 28, 2025
லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனா?

லோகேஷிடம் கதை கேட்ட அல்லு அர்ஜூன், அக்கதை பிடித்துப்போக ஸ்கிரிப்ட் வேலைகளை உடனே தொடங்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு, தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், ‘கூலி’ பட தோல்விக்கு பிறகு ‘DC’ படத்தில் நடித்து வரும் லோகேஷ், ‘கைதி 2’ படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் – அல்லு அர்ஜுன் காம்போ எப்படி இருக்கும்?


