News April 29, 2025
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மாவோயிஸ்டுகள்

பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர். மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் ‘ககர்’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும்படியும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இது பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள 2-வது கடிதமாகும்.
Similar News
News November 23, 2025
தருமபுரி: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

தருமபுரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News November 23, 2025
சபரிமலை தங்கம் திருட்டு: இந்த நடிகர் சாட்சியா?

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி, <<18345270>>பத்மகுமார் <<>>உள்பட பலர் கைது செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் ஜெயராம் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உன்னிகிருஷ்ணன் நடத்திய ஒரு சடங்கில் அவர் கலந்துகொண்டதே இதற்கு காரணம். ஜெயராமின் வாக்குமூலத்தை பதிவு செய்ய SIT திட்டமிட்டுள்ளது.
News November 23, 2025
நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம்: CM ஸ்டாலின்

துபாய் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் <<18364839>>நமன்ஷ்<<>> சியாலின் உடல் கோவைக்கு கொண்டு வரப்பட்ட காட்சிகளை பார்த்து கண்கலங்கியதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்கு தமிழ்நாடு தனது அஞ்சலியை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் CM கூறியுள்ளார்.


