News April 29, 2025
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மாவோயிஸ்டுகள்

பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர். மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் ‘ககர்’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும்படியும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இது பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள 2-வது கடிதமாகும்.
Similar News
News November 16, 2025
தேஜஸ்வி யாதவ் செருப்பால் அடிக்க வந்தார்: ரோஹிணி

லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி கொடுத்ததை பற்றி வீட்டில் <<18296664>>சண்டை<<>> வெடித்ததாக அவரது மகள் ரோஹிணி தெரிவித்துள்ளார். சண்டையின்போது, தேஜஸ்வி யாதவ் தன்னை கொச்சையாக பேசியதாகவும், செருப்பால் அடிக்க வந்ததாகவும் ரோஹிணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தன்னுடைய கண்ணியத்தை காக்கவே குடும்பத்தையும், அரசியலையும் விட்டு விலகுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், ரோஹிணியின் குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.
News November 16, 2025
11-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதிகள்

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. அதன்படி, , டிச.10: தமிழ், டிச.12: ஆங்கிலம், டிச:15: இயற்பியல், பொருளாதாரம். டிச.17: கணிதம், விலங்கியல், வர்த்தகம். டிச.19: வேதியியல், கணக்கு பதிவியல். டிச.22: கணினி அறிவியல். டிச.23: உயிரியல், வரலாறு, தாவரவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இருப்பதால் சீக்கிரம் தயாராகுங்கள் மாணவர்களே!
News November 16, 2025
6-9 வகுப்புகள்.. அரையாண்டு தேர்வு அட்டவணை

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. *டிச.15- தமிழ், டிச.16-ஆங்கிலம், டிச.17-விருப்ப மொழி, டிச.18-கணிதம், டிச.19-உடற்கல்வி, டிச.22-அறிவியல், டிச.23-சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 4-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறையாகும்.


