News October 15, 2025
தலைக்கு ₹7 கோடி: பயங்கர மாவோயிஸ்ட் சரண்

தலைக்கு ₹7 கோடிக்கும் மேல் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மல்லஜொலு வேணுகோபால் ராவ், தனது 60 போராளிகளுடன் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா CM பட்னவிஸ் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த மாவோயிஸ்ட்டான வேணுகோபால், 76 CRPF ஜவான்கள் கொல்லப்பட்ட 2010 தண்டேவாடா தாக்குதல் உள்பட பல தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.
Similar News
News October 15, 2025
காலத்தை வென்ற விண்வெளி நாயகனுக்கு இன்று பிறந்தநாள்!

இந்திய ஏவுகணைகளின் தந்தை என கொண்டாடப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. தேசத்தின் சிறந்த மூளைகளை வகுப்பறையின் கடைசி பெஞ்ச்சில் காணலாம் என கூறியவர், நாட்டின் ஜனாதிபதியாகவும் திகழ்ந்தார். ரோகிணி 1 ஏவுகணை, பொக்ரான் சோதனை போன்றவற்றை முன்னின்று செய்து காட்டி, விண்வெளி நாயகனாக உயர்ந்து நிற்கிறார். அவரின் சில அரிய போட்டோஸை மேலே கொடுத்துள்ளோம், வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும்.
News October 15, 2025
விசிக தம்பட்டம் அடிக்கும் கட்சி அல்ல: திருமாவளவன்

தாங்கள் தான் அடுத்த CM, அடுத்து ஆட்சி அமைப்போம் என தம்பட்டம் அடிக்கும் கட்சி விசிக அல்ல என்று திருமாவளவன் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரை பின்பற்றும் கொள்கை கொண்ட கட்சி தான் விசிக என்றும் அவர் குறிப்பிட்டார். விசிக கொள்கையுடன் வலுவாக வளர்கிறது என்பதாலேயே சிலர் சதித் திட்டம் தீட்டி வீழ்த்த நினைப்பதாகவும் தெரிவித்தார்.
News October 15, 2025
புதிய சகாப்தம் படைக்கும் UPI!

UPI பரிவர்த்தனை முறை விரைவில் ஜப்பானிலும் அறிமுகமாகவுள்ளது. அந்நாட்டிலுள்ள லோக்கல் கடைகளிலும் UPI பேமெண்ட்ஸ் முறையை கொண்டுவர, ஜப்பானின் NTT Data-வுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய சுற்றுலா பயணிகள் ஜப்பானிலும் எளிதாக UPI மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். முன்னதாக, கத்தார், பிரான்ஸ், UAE, இலங்கை, சிங்கப்பூர், நேபாளம், பூடான் போன்ற நாடுகளிலும் UPI உள்ளது குறிப்பிடத்தக்கது.