News September 27, 2025
நவராத்திரி 6-ம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்!

நவராத்திரி 6 ஆம் நாளில் அம்பாள், சண்டிகா தேவி என்னும் ரூபத்துடன் காட்சி அளிக்கிறாள். இன்றைய தினம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
ஹே கௌரி ஷங்கர் அர்தங்கி யதா த்வம் ஷங்கர் பிரியா ததா மாம் குரு கல்யாணி கான்டகம் சுதுர்லபம்
பொருள்:
சிவனின் பாதி உடல் கொண்ட பார்வதி தேவியே, நீ சிவனின் பிரியமானவள் போல, எனக்கு விரும்பத்தகுந்த கணவனை அருள வேண்டும். SHARE.
Similar News
News September 27, 2025
குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு..

குரூப் 2, 2ஏ தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வர்கள் முறையாக கடைபிடிக்க TNPSC அறிவுறுத்தியுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு முன்பே வந்துவிட வேண்டும் என்றும், 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் TNPSC கூறியுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு சார்பில் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே சரியான நேரத்திற்கு செல்லவும்.
News September 27, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
News September 27, 2025
இன்று முதல் விடுமுறை..

காலாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. அனைத்து பள்ளிகளும் அக்.5 வரை 9 நாள்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். காலாண்டு விடுமுறை நாள்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.