News September 26, 2025

நவராத்திரி 5-ம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்!

image

நவராத்திரியின் 5-ம் நாளில் மகாலட்சுமியை வேண்டி, இந்த மந்திரத்தை சொல்லுங்கள்:
ஓம் நாகவாஹினாயை வித்மஹே
சக்ரஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.
பொருள்:
ஓம், சர்ப்பங்களை அணிந்த, சக்கரத்தை கையில் ஏந்திய வைஷ்ணவி தேவியின் சக்தி வடிவாகிய அந்த தெய்வத்தை நான் தியானிக்கிறேன். அந்த சக்திவாய்ந்த தெய்வம் எனது மனதை நல்ல வழியில் ஒளிரச் செய்யட்டும், புத்திசாலித்தனத்தை அருளட்டும். SHARE.

Similar News

News September 26, 2025

3-வது முறையாக CPI பொதுச் செயலாளரானார் டி.ராஜா

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 3-வது முறையாக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். CPI-ஐ பொறுத்தவரை 75 வயதுக்கு உட்பட்டவர்களே நிர்வாக குழு பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற நிலையில், டி.ராஜாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 76 வயதான ஒருவர், பதவியில் நீடிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறை. 2019 முதல் CPI பொ.செ.,வாக உள்ள ராஜா, வேலூர், சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்.

News September 26, 2025

மார்க் அடிப்படையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

image

195 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை DRDO வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: B.E, Diploma, ITI படிப்பில் ECE, CSE, EEE, Mechanical. வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். சம்பளம்: DRDO RCI-யின் ஆட்சேர்ப்பு விதிகளின்படி வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.28. தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் பணி. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

News September 26, 2025

BREAKING: திமுகவில் இணைந்தவுடன் முக்கிய பதவி

image

அதிமுகவிலிருந்து விலகியிருந்த மருது அழகுராஜ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தித் தொடர்பாளர் துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பேச்சாளராகவும், ‘நமது எம்ஜிஆர்’ அதிமுக நாளிதழ், EPS-OPS ஆல் உருவாக்கப்பட்ட ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் இவர் இருந்தார். ஜெ.,வின் அரசியல் உரைகளை எழுதிய அனுபவமுடைய இவர், இனி திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பார்.

error: Content is protected !!