News December 4, 2024
மன்சூர் அலிகான் மகன் கைது

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 7, 2025
முதலிரவில் பதற்றம்.. பயந்து ஓடிய மாப்பிள்ளை

முதலிரவு குறித்த பதற்றத்தால் மாப்பிள்ளை வீட்டு ஓடிய சம்பவம் UP-ல் நடந்துள்ளது. முதலிரவு அறையில் பயன்படுத்த, low watt bulb வாங்க சென்ற மொஹ்சீன் என்பவர், 5 நாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு பதற்றமும், மன அழுத்தமும் ஏற்பட்டதால் செய்வதறியாமல் ஓடியதாக கூறினார். இதற்கு மனநலன் ஆலோசனை பெறுங்கள் என அறிவுறுத்தி மொஹ்சீனை, போலீஸ் வீட்டுக்கு அனுப்பியது.
News December 7, 2025
நெப்போலியன் பொன்மொழிகள்!

*முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று *சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் செயலுக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள் *சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி, தைரியம் என்பது இரண்டாம் தகுதியே *வாய்ப்புகளே இல்லாதபோது திறமையால் ஒன்றும் பயனில்லை *வெற்றி கிடைக்குமா என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்
News December 7, 2025
திருமணம் எப்போது? மனம் திறந்த சிம்பு

திருமண விஷயத்தில், ரொம்பவும் அடிவாங்கிவிட்டதாக சிம்பு கூறியுள்ளார். எப்போது திருமணம் செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் நாம் தனியாக இருக்கிறோமா அல்லது யாருடனாவது இருக்கிறோமா. அது முக்கியமல்ல என்றும் ஒழுக்கமாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறோமா என்பதே முக்கியம் எனவும் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும், தன் வாழ்க்கையில் அது நடக்கும்போது (திருமணம்) தானாக நடக்கும் என்று அவர் பேசியுள்ளார்.


