News July 8, 2024
மாஞ்சோலை தோட்டத்தை பகிர்ந்தளிக்கலாம்

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லி சென்று முறையிடுவோம் என்று புதக தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். பிபிடிசி நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் 2028இல் முடிவடைந்த உடன் அந்த தேயிலை தோட்டங்கள் நேரடியாக தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் எனக் கூறிய அவர், அவற்றை அழிக்காமல் கையகப்படுத்தி, தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
விலை குறைத்த அத்யாவசிய பொருள்கள்

GST வரி குறைப்பால் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதில் சிலவற்றின் விலை பட்டியல் இதோ: அமுல் வெண்ணெய்(₹4 – ₹58வரை ), அமுல் நெய் (₹40 – ₹610), Maggi (₹4 600G), Nescafe(₹30), Sunfest marie light (₹20), nutella (₹5- ₹399), டாபர் ஜூஸ் (₹8) உள்ளிட்டவைகளின் விலை குறைந்துள்ளது. அதேபோல் ஹார்லிக்ஸ், கிஷான் ஜாம், ப்ரூ காபி உள்ளிட்டவையின் விலையும் குறைந்துள்ளது.
News September 24, 2025
தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்தின் உரிமை: ஐநா

ஐநா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரெஸ் உரையாற்றினார். அதில் தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை என திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும் என கூறிய அவர், 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
News September 24, 2025
சிவாஜி கணேசன் பொன்மொழிகள்

*வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் விளைவு
*கலை என்பது மனிதர்களுக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி
*மக்களின் கைதட்டல்கள்தான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது
*வாழ்க்கை ஒரு நாடகம், அதில் நாம் அனைவரும் நடிகர்கள்
*ஒரு நடிகன் என்பவன், சமூகத்தில் நடப்பவற்றை அவனுடைய நடிப்பின் மூலம் பிரதிபலிப்பவன்