News December 31, 2024
பகிரங்க மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த அனைத்து துயரங்களுக்காகவும் வருந்துவதாக கூறிய அவர், இந்த ஆண்டு மணிப்பூர் மக்களுக்கு துரதிர்ஷ்டவசமானது என்றார். 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்றும், அதற்கான முயற்சியை எடுத்து வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
மெரினா கடற்கரையில் இன்று கலாச்சார கலைவிழா

சென்னை, மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு கலாச்சார கலைவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் நம் பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில் பெரிய மேளம், சேவையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழர் மரபை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்றது

இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதியின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
News November 23, 2025
-40°C குளிரில் இந்திய நகரம் PHOTOS

டிராஸ், கார்கில் மாவட்டத்தில் உயரமான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள நகரம். இது, பூமியில் மக்கள் வாழும் மிகவும் குளிரான பகுதிகளில் ஒன்று. இங்கு, குளிர்காலத்தில் வெப்பநிலை, இயல்பாகவே -20°C முதல் -30°C வரை செல்லும். இந்நிலையில், 3 நாள்களுக்கு முன், – 40°C-க்கு குறைந்தது. இதன்மூலம், டிராஸ் உலகின் 2-வது குளிர்பகுதியாக மாறியுள்ளது. மேலே உள்ள இதன் அழகிய போட்டோஸை, ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.


