News December 31, 2024

பகிரங்க மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

image

மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த அனைத்து துயரங்களுக்காகவும் வருந்துவதாக கூறிய அவர், இந்த ஆண்டு மணிப்பூர் மக்களுக்கு துரதிர்ஷ்டவசமானது என்றார். 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்றும், அதற்கான முயற்சியை எடுத்து வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

எப்படி இருக்கிறது பைசன்: காளமாடன்?

image

கபடி விளையாட்டும், அதனை சுற்றி நடக்கும் அரசியலும்தான் ‘பைசன்: காளமாடன்’. ப்ளஸ்: எழுத்தாளராக மாரி செல்வராஜ் மீண்டும் வென்றிருக்கிறார். கடைசி 20 நிமிடங்களில் அசத்தி விட்டார். துருவ் விக்ரம் கடின உழைப்பை கொடுத்துள்ளார். பசுபதி திரையில் மிரட்டுகிறார். நிவாஸ்.கே.பிரசன்னாவின் இசை வருடுகிறது. பல்ப்ஸ்: காதல் காட்சிகள் அழுத்தமாக இருந்திருக்கலாம். சில இடங்களில் படம் கொஞ்சம் சலிப்பை கொடுக்கிறது.

News October 17, 2025

டிகிரி முடித்தாலே அரசு வேலை; APPLY NOW!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 காலியிடங்கள் உள்ளன. Graduate Apprentices, Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. இப்பணிகளுக்கு ₹9,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. டிகிரி முடித்த இளைஞர்கள் அக்.18-ம் தேதிக்குள் nats.education.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பியுங்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 17, 2025

பேரவையிலேயே எதிரொலித்த பாமக பஞ்சாயத்து

image

சட்டப்பேரவையில் இருமல் சிரப் விவகாரத்தில் பாமக MLA அருளை பேச அனுமதித்ததற்கு, அன்புமணி தரப்பு MLA-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அவையின் மாண்பு கெடுவதாக கூறிய சபாநாயகர், பாமக பஞ்சாயத்துகளை பேரவைக்கு வெளியே வைத்துக்கொள்ளும்படி கூறினார். மேலும், இருமல் சிரப் விவகாரத்தில் முதலில் கடிதம் போட்டது MLA அருள்தான் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

error: Content is protected !!