News December 31, 2024
பகிரங்க மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த அனைத்து துயரங்களுக்காகவும் வருந்துவதாக கூறிய அவர், இந்த ஆண்டு மணிப்பூர் மக்களுக்கு துரதிர்ஷ்டவசமானது என்றார். 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்றும், அதற்கான முயற்சியை எடுத்து வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
மசோதாவை வாசிக்க கூட நேரம் தருவதில்லை: கனிமொழி

PM, CM குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதுபற்றி பேசிய கனிமொழி, எதிர்க்கட்சிகளுக்கு மசோதாக்களை வாசிக்கக்கூட கால அவகாசம் தராமல், கூட்டத்தொடரின் கடைசி நாளில் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யும் பழக்கத்தை மத்திய அரசு வழக்கமாக செய்வதாக குற்றம் சுமத்தினார். ஜனநாயகத்தை சீர்குலைக்க குறிக்கோளோடு மத்திய அரசு செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
News August 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 21 – ஆவணி 5 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM ▶ கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: திதித்துவம் ▶ சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.
News August 21, 2025
கர்நாடகாவை போல் TN அரசு செயல்படவில்லை: அன்புமணி

சமூகநீதியை CM ஸ்டாலின் குழித்தோண்டி புதைப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 183 நாள்களில் சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா அரசு காட்டிய வேகத்தை வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் TN அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் காட்டவில்லை என அன்புமணி குற்றம்சுமத்தியுள்ளார்.