News October 26, 2024
மாங்கல்ய தோஷம் போக்கும் ஸ்ரீகருடாழ்வார்

பெண்களின் ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அத்தகைய தோஷம் உள்ள பெண்கள், சனிக்கிழமை அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று விஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாக திகழும் கருடனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, மரிக்கொழுந்து மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி, ஸ்ரீகருட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
Similar News
News September 10, 2025
கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்திவந்த இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்று நள்ளிரவில், கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் தலைவர் உயிர்தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணயக் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது விவாதமாகியுள்ளது.
News September 10, 2025
விஜய்க்கு பதிலடி கொடுத்த TVK தலைவர்

தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக்கு திருச்சி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால், விஜய்யின் மக்கள் செல்வாக்கை பார்த்து திமுக அரசு பயப்படுவதாக தவெகவினர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய தவாக (TVK) தலைவர் வேல்முருகன், விஜய்யை கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது; ஆளானப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியையும், நேருவையும் சந்தித்த கட்சி திமுக என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்!

2003-ம் ஆண்டு முதல், உலகம் முழுவதும் செப்டம்பர் 10-ம் தேதி தற்கொலை தடுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மன அழுத்தம், தனிமை, பிரச்னைகள் காரணமாக தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பதே இதன் நோக்கம். ஒரு வார்த்தை கூட ஒருவரின் உயிரை காப்பாற்றலாம். ஒருவர் உங்களிடத்தில் மனம் திறந்து பேசவும், உதவி கேட்கவும் எளிதில் அணுகக்கூடியவராக இருங்கள். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது.