News July 25, 2024

மாஞ்சோலை: மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு

image

மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்குப்பதிவானது நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. மனுவில், 96 ஆண்டுகளாக வனத்தில் குடியிருந்து வரும் மாஞ்சோலை மக்களுக்கு வன உரிமை மறுக்கப்படுவதாகவும், தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவது மனித உரிமை மீறல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 13, 2025

நெல்லை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

image

திருநெல்வேலி மகாராஜா நகர் பகுதியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை சுற்றி இரவு நேரத்தில் மர்ம நபர் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விட்டதான தகவலும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி எந்த வெடிகுண்டு மிரட்டலும் இல்லை என விளக்கம்.

News November 13, 2025

நெல்லை: முக்கிய ரயில்கள் 9 நாட்களுக்கு ரத்து

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பாரம் அமைக்கும் பணி காரணமாக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் மற்றும் நெல்லையிலிருந்து மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்படும் ரயில்கள் இன்று 13-ம் தேதி மற்றும் 14 15 17 19 20 21 22 24 ஆகிய தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE

News November 13, 2025

நெல்லை Southern Electronic நிறுவனத்தில் வேலை

image

திருநெல்வேலியில் உள்ள Southern Electronic என்ற நிறுவனத்தில் Mechanic Tv பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு ஐடிஐ படித்த ஆண்கள் தேவை. மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த மாதம் 30ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!