News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 12, 2025
ரஜினிக்கு பிறந்தநாள்: கமல், EPS வாழ்த்து!

75 ஆண்டுகால தனிச்சிறப்பான வாழ்வும், 50 ஆண்டுகால லெஜண்டரி சினிமா கரீயரும் கொண்ட நண்பரே, ஹேப்பி பர்த்டே என கமல் ரஜினியை வாழ்த்தியுள்ளார். அதேபோல, அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என EPS வாழ்த்தியுள்ளார். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News December 12, 2025
BREAKING: செங்கோட்டையன் உறுதி செய்தார்

ஈரோடு, விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை பகுதியில் வரும் 18-ம் தேதி விஜய்யின் பரப்புரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பரப்புரை நடைபெறவுள்ள இடம் <<18537715>>HRCE-ன் கீழ் உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது<<>> என கலெக்டர், SP-க்கு அத்துறையின் அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 12, 2025
அனுபவம் வாய்ந்த தலைவரை இழந்துவிட்டோம்: PM மோடி

Ex மத்திய உள்துறை அமைச்சர் <<18539967>>சிவராஜ் பாட்டீல்<<>> இன்று காலமானார். அவரது மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் X தளப்பதிவில், சிவராஜ் பாட்டீலின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அனுபவம் வாய்ந்த தலைவரான அவர், சமூக முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்டவர். பலமுறை அவருடன் உரையாடியுள்ளேன். அவரது குடும்பத்துக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி! என குறிப்பிட்டுள்ளார்.


