News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News September 19, 2025
மழை சீசனில் சளி, இருமல் தொல்லையை விரட்டும் தேநீர்!

சளி, இருமல், தொண்டை வலி ஆகியவை நீங்க, அதிமதுரம் டீ தான் பெஸ்ட் *ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து, அதில் அதிமதுரம் தூள் அல்லது ஒரு துண்டை சேர்க்கவும் *அதை 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும் *பின்னர், அதை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி, தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்தால், சுவையான அதிமதுரம் டீ ரெடி! இந்த பயனுள்ள தகவலை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 19, 2025
நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி

மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு முதல் நபராக DCM உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கண்ணீருடன் இருந்த ரோபோ சங்கரின் மனைவி, மகள்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். மேலும், மேடை கலைஞராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரையில் சாதித்து தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர் எனவும் தனது X பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
News September 19, 2025
சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்

சபரிமலை துவார பாலகர்களின் சிலையில் வேயப்பட்ட தங்க கவசத்தில் 4 கிலோ குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவசத்தில் பழுது ஏற்பட்டதாக கூறி, சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. ஆனால், கோர்ட் அனுமதி இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையானதால், அதை மீண்டும் கொண்டு வந்து சோதித்த போது, தங்கம் குறைந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.