News October 24, 2024

சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

image

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.

Similar News

News December 7, 2025

கனடா எல்லையில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

image

அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் எல்லையில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. வனப்பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றாலும், இந்த வனப்பகுதிக்கு அருகே 91 கி.மீ., தூரத்தில் மக்கள் வசிப்பதாக USGS தெரிவித்துள்ளது. இந்நிலையில், சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

News December 7, 2025

பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

image

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹181 Data பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ₹195 பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹195-ல் 12GB Data + JioHotstar உள்பட 20 OTT-க்கான 1 மாத Subscription கிடைக்கும். முன்னதாக, ₹181 ரீசார்ஜ் பிளானில் 30 நாளுக்கான 15GB Data வழங்கியதோடு 20 OTT Subscription-ஐ ஏர்டெல் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

News December 7, 2025

வங்கிகளில் ₹78,000 கோடி உரிமை கோரப்படவில்லை: PM

image

நாட்டின் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ₹78,000 கோடி உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் என்று குறிப்பிட்ட அவர், அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!