News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 16, 2025
தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

வரும் 18-ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பங்கேற்கும் தவெக தொண்டர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. *குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவர். *கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை. *விஜய்யின் வாகனத்தை பின் தொடர கூடாது. *மரங்கள், மின் கம்பங்களில் ஏறக்கூடாது. *உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது.
News December 16, 2025
18-ம் தேதி சுழன்று அடிக்க உள்ள ‘தளபதி புயல்’

‘ஜனநாயகன்’ படத்தின் 2-ஆவது பாடல் வரும் 18-ம் தேதி வெளியாக உள்ளது. நேற்று வரையிலான பேரமைதி, 18-ம் தேதி பெரும் புயலுக்கான முன்னோட்டம் என குறிப்பிட்டு, தயாரிப்பு நிறுவனம் இதை அறிவித்துள்ளது. ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெறும் அதே நாளில், இப்பாடல் வெளியாக உள்ளது. முன்னதாக, இப்படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ சமீபத்தில் வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
News December 16, 2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு.. சோனியா, ராகுலுக்கு நிம்மதி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான ED-ன் குற்றப்பத்திரிக்கையை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் நிராகரித்துள்ளது. ED குற்றம்சாட்டுவது போல் இந்த பணமோசடி வழக்கு எந்த விசாரணை அமைப்பின் FIR அடிப்படையிலும் நடத்தாமல், தனியார் (சுப்ரமணியன் சுவாமி) அளித்த புகாரின் அடிப்படையிலானது என கூறி
வழக்கை விசாரிக்க கோர்ட் மறுத்துள்ளது. இதை குறிப்பிட்டு நீதி வென்றதாக காங்., தெரிவித்துள்ளது.


