News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 19, 2025
வத்தலகுண்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை

வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக தாண்டிக்குடியைச் சேர்ந்த யாதவ்குமார் (19) மீது புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், யாதவ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 19, 2025
உலகின் டாப் 8 பணக்கார குடும்பங்கள் இவர்கள்தான்!

பணக்காரர்கள் என்றாலே அம்பானிகளும், அதானியும் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், உலக பணக்கார குடும்பங்களின் 2025 பட்டியலில் அம்பானி குடும்பமே 8-வது இடத்தில் உள்ளது. அம்பானியையே ஓரங்கட்டிய குடும்பங்களின் லிஸ்ட்டை மேலே கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து எந்த குடும்பம் உச்சத்தில் இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கோங்க. SHARE IT.
News December 19, 2025
விஜய்யின் பேச்சு.. ஏமாற்றத்தில் தவெக தொண்டர்கள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்கவில்லை என அரசியல் கட்சிகள் சாடியிருந்தன. மேலும், தேசிய அளவில் எதிரொலிக்கும் MGNREGA திட்டத்திற்கு மாற்றான <<18571984>>VB-G RAM G<<>> மசோதா பற்றியாவது ஈரோடு கூட்டத்தில் அவர் பேசுவார் என மக்களும், TVK தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், எத்தனை நிமிடங்கள் பேசணும், எதை பேசணும் என்பது தனக்கு தெரியும் என விஜய் கூறினார். இதனால் TVK தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.


