News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 25, 2025
புது ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. NEW UPDATE

பொங்கல் பரிசு தொகுப்பை அரசு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, புதிய கார்டுகள் பிரிண்ட் நிலையில் உள்ளதாக கூறினர். TN அரசு பொங்கல் பரிசை அறிவிப்பதற்கு முன்னரே, புதிய கார்டுகள் ஆக்டிவ் நிலையிலிருந்தால் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
News December 25, 2025
இப்படி ஒரு X-mas வாழ்த்தை கேட்டிருக்கவே மாட்டீங்க!

இத்தாலி PM மெலோனி அரசு அதிகாரிகளுக்கு கூறிய X-mas வாழ்த்து உலகளவில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வருடம் அனைவருக்கும் மிகவும் கடினமாக இருந்ததாக கூறிய அவர், அடுத்த ஆண்டு இன்னும் மோசமாக இருக்கும் என கூறியுள்ளார். அதனால் இந்த விடுமுறை நாள்களில் நன்றாக ஓய்வெடுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஒரு பேச்சுக்காவது அடுத்த வருடம் நல்லா இருக்கும்னு சொல்லியிருக்கலாம் என நெட்டிசன்கள் குமுறுகின்றனர்.
News December 25, 2025
வரும் நாள்களில் வெள்ளியின் விலை இதுதான்!

வெள்ளி விலை நேற்று(டிச.24) ஒரே நாளில் ₹10,000, இன்று(டிச.25) ₹1,000 என உயர்ந்து ₹2,45,000-ஐ தொட்டுள்ளது. தற்போது தொழில்துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதன் விலை எகிறி வருகிறது. அதன்படி, வரும் நாள்களில் வெள்ளி கிராமுக்கு ₹300, கிலோவுக்கு ₹3 லட்சம் வரை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர். எனவே வெள்ளியிலும் சிறு முதலீடுகளை செய்யலாம் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


