News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 558 ▶குறள்: இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். ▶பொருள்: வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.
News December 23, 2025
சீமானும் விஜய்யும் பாஜகவின் பிள்ளைகள்: திருமாவளவன்

RSS-க்காக விஜய் கட்சி தொடங்கியுள்ளதாக திருமாவளவன் சாடியுள்ளார். திமுகவை தீய சக்தி என கூறும் விஜய், முடிந்தால் திமுகவை அழிக்கட்டும் என ஆவேசமாக கூறியுள்ளார். அதேபோல், பிரபாகரன் பெயரை கூறி தமிழக மக்களை ஏமாற்ற சீமான் கணக்கு போட வேண்டாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், சீமானும் விஜய்யும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்றும் திருமா காட்டமாக தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News December 23, 2025
ஓய்வை அறிவித்தார் CSK முன்னாள் வீரர்

கர்நாடகாவை சேர்ந்த இந்திய ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கெளதம், அனைத்து வகையான ஃபார்மட்களிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் மட்டுமே அதிகமாக விளையாடியுள்ள இவர், IPL-ல் CSK, MI, RR, PBKS, LSG அணிகளில் இடம்பெற்றுள்ளார். அதிலும், 2021-ல் இவரை ₹9.25 கோடிக்கு CSK வாங்கியிருந்தது. மேலும், 2021-ல் SL-க்கு எதிராக விளையாடியதே, இவர் பங்கேற்ற ஒரேயொரு ODI ஆகும்.


