News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 9, 2025
RO-KO நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை: அஸ்வின்

2027 ODI உலகக்கோப்பை வரை ரோஹித், கோலி நீடிப்பார்களா என்ற கேள்வி முன்வைக்கப்படுவதை அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார். 2 மூத்த வீரர்களும் இன்னும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது. அவர்கள் நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை. அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த கிரிக்கெட் அடுத்த தலைமுறையினருக்கு பாடமாக இருக்கும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
புத்தர் பொன்மொழிகள்

*நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு. *நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.
News December 9, 2025
கொரோனா பற்றி கூறியவரை பழிவாங்க துடிக்கும் சீனா

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியதாக உலகிற்கு சொன்னதால், தன்னை பழிவாங்க சீனா முயற்சிப்பதாக, வைரலாஜிஸ்ட் லி-மியாங் யான் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக, சீனாவில் உள்ள தனது பெற்றோர், கணவரை பிடித்து வைத்துக் கொண்டு, தன்னை நாடு திரும்ப சொல்லி அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து உலகிற்கு சொன்னதும், யான் US-ல் தஞ்சம் புகுந்தார்.


