News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 12, 2025
நீதிபதியை பதவி விலக சொல்வது சரியல்ல: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக செயல்படுவது நாட்டுக்கு நல்லதல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட MP-க்கள் கையெழுத்திட்டு லோக்சபா தலைவரிடம் நோட்டீஸ் வழங்கியது தவறான முன்னுதாரணம் என்றும் விமர்சித்துள்ளார். தனிப்பட்ட ஒரு கட்சியின் வாக்கு வங்கிக்காக இவ்வாறு செயல்படுவதாக அவர் சாடியுள்ளார்.
News December 12, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹90.46 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) 75 டாலர்கள் அதிகரித்து $4,271 ஆக உயர்ந்துள்ளது.
News December 12, 2025
முருகனுக்கு சுருட்டு படைத்து வழிபடும் வினோத கோயில்!

திருச்சி விராலிமலை முருகன் கோயிலில்தான் சுருட்டு படைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் முருகபக்தரான கருப்பமுத்து மழையில் சிக்கினார். ஆற்றை கடக்க முருகனிடம் வேண்டியபடி, அவர் சுருட்டு பிடித்துள்ளார். பின்னால் வந்தவருக்கும் சுருட்டை கொடுக்க, இருவரும் ஆற்றை கடந்துள்ளனர். அந்நபர் மாயமாக, கோயிலின் முருகன் சன்னதியில் சுருட்டு கிடந்துள்ளது. வழிகாட்ட முருகனே வந்ததாக கருப்பமுத்து கூற, சுருட்டு படையலானது.


