News October 24, 2024

சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

image

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.

Similar News

News December 13, 2025

கோலியை முந்தினாலும் அலட்டிக் கொள்ளாத வைபவ்!

image

U19 ஆசியக்கோப்பையில் நேற்றைய UAE உடனான போட்டியில், இந்திய வீரர் சூர்யவன்ஷி 171 ரன்கள் விளாசி ருத்ரதாண்டவம் ஆடினார். இதையடுத்து, கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் பட்டியலில் அவரது பெயர் தடாலடியாக உயர்ந்து, கோலியையும் முந்தியது. இது தொடர்பாக பேசிய சூர்யவன்ஷி, இது போன்ற செய்திகள் சிரிப்பை வரவழைக்கிறது; இருப்பினும் இது எனது கிரிக்கெட்டை பாதிக்காது, கடந்து சென்றுவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

டிசம்பர் 13: வரலாற்றில் இன்று

image

*1952 – நடிகை லட்சுமி பிறந்தநாள். 1963 – டிடிவி தினகரன் பிறந்தநாள். *1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே. 1990 – நடிகை ரெஜினா கஸான்ட்ரா பிறந்தநாள். *2001 – இந்திய நாடாளுமன்றக் கட்டடம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

News December 13, 2025

இன்சூரன்ஸில் 100% அந்நிய முதலீடு: மக்களுக்கான பயன்?

image

இன்சூரன்ஸ் துறையில், அந்நிய நேரடி முதலீட்டை 74% to 100%ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக திங்களன்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பால், சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக இந்தியாவில் கால்பதிக்கும். இதனால், மக்களுக்கு சர்வதேச தரத்திலான சேவை கிடைப்பதோடு, காப்பீட்டுக்கான பிரீமியம் விலையும் குறைய வாய்ப்புகள் உள்ளது.

error: Content is protected !!