News October 24, 2024

சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

image

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.

Similar News

News December 3, 2025

இந்த நாள்களை மறந்துடாதீங்க!

image

விஜய் ஹசாரே தொடரில் வரும் 24-ம் தேதி ஆந்திரா, 26-ம் தேதி குஜராத், ஜனவரி 6-ம் தேதி ரயில்வே ஆகிய அணிகளுக்கு எதிராக டெல்லி வீரராக கோலி களமிறங்குகிறார். கடைசியாக 2010-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் கோலி விளையாடி இருந்தார். முன்னதாக, 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்து கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவருக்கு BCCI அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2025

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ₹90.14 ஆக சரிவு

image

டாலருக்கு($) நிகரான ரூபாயின்(₹) மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹90.14 ஆக சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் ₹86.45 ஆக இருந்த ₹ மதிப்பானது பல மாதங்களாக பெரிய அளவில் மாற்றமின்றி நீடித்தது. ஆனால், தற்போது USA வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் சரிவை கண்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருள்களுக்கான செலவு இந்தியாவில் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News December 3, 2025

TN-ல் இந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்

image

தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை காரணமாக தன்னால் இந்தி கற்க முடியவில்லை என எல்.முருகன் கூறியிருக்கிறார். இதனால் டெல்லி சென்ற பிறகுதான் இந்தி கற்றதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் அந்த வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்தி கற்பது தன்னுடைய உரிமை எனவும் ஆனால், மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கிறது என்று கூறி தமிழகம் அதனை எதிர்க்கிறது என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!