News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 29, 2025
பிறரை கவர இந்த மாதிரி Dress பண்ணுங்க!

ஆண்களே, உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா? அதற்கு உங்கள் பேச்சு, நடை, பாவனை மட்டும் போதாது. எந்த மாதிரியான ஆடைகளை நீங்கள் அணிகிறீர்கள் என்பதும் அவசியமாகிறது. மேலே இருக்கும் புகைப்படங்களை SWIPE செய்து, எந்த நிற சட்டைக்கு எந்த நிற பேண்ட் அணிந்தால் நன்றாக இருக்கும் என தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த ஆண்களுக்கும் இந்த செய்தியை SHARE செய்யுங்கள்.
News December 28, 2025
BREAKING: விஜய் கார் விபத்தில் சிக்கியது

சென்னை ஏர்போர்டில் <<18697507>>விஜய் தடுமாறி கீழே விழுந்ததால்<<>> சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அங்கிருந்து புறப்பட்டபோது அவரின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. பின்னோக்கி வந்த கார், விஜய் இருந்த காரின் முன்பக்கத்தில் மோதியது. இதில், விஜய் இருந்த காரின் இண்டிகேட்டர் பகுதி சேதமடைந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
News December 28, 2025
இந்தியாவில் கால் தடத்தை விரிவாக்கும் Rolls Royce!

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான Rolls Royce, வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களுக்காக, அதிநவீன இன்ஜின்களை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் US, ஜெர்மனிக்கு பிறகு இந்தியாவை தங்களின் உள்நாட்டு சந்தையாக விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளது.


