News April 25, 2024
உச்சநீதிமன்றத்தில் மம்தா மேல்முறையீடு

ஆசிரியர்கள் பணிநியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மே.வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த 2016இல் 26 ஆயிரம் ஆசிரியர் பணியமர்த்தப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அந்த நியமனங்களை அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பு தேர்தல் நேரத்தில் மம்தா அரசுக்கு சிக்கலாகக் கருதப்படும் நிலையில், தற்போது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
திமுக கூட்டணியில் பூசல்: இபிஎஸ்

திமுக கூட்டணியில் பிரச்னை ஆரம்பித்துவிட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, திமுகவிடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்க ஆரம்பித்துவிட்டதாகவும், இதனால் இருகட்சிகளுக்கு இடையே பூசல் வெடித்துள்ளதாகவும் அவர் பிரசாரத்தில் பேசியுள்ளார். மேலும், காங்கிரசாருக்கு இப்போதாவது ஞானோதயம் வந்ததே என கூறிய அவர், விரைவில் திமுக கூடாரம் காலி ஆகிவிடும் என கூறியுள்ளார்.
News September 23, 2025
BREAKING: மழை வெளுத்து வாங்கும்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், செப்.29 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. செப்.25, 26, 27-ல் சில மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
News September 23, 2025
பாராசிட்டமால் எடுத்தால் குழந்தைக்கு ஆட்டிசம் வருமா?

கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படலாம் என டிரம்ப் கூறியிருந்தார். இவரது இந்த கூற்றுக்கு தெளிவான ஆதாரம் இல்லை என மருத்துவர்கள் மறுத்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கு வலி (அ) காய்ச்சல் ஏற்படும்போதும் சிகிச்சை அளிக்காமல் விடுவது ஆபத்தில் முடியும். எனவே டாக்டர்களை கேட்டு பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.