News April 20, 2025
வரிசையின் ஓரத்தில் அமர்ந்த மல்லை சத்யா..

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த துரை வைகோ மேடையில் அமர வைக்கப்பட்டார். மல்லை சத்யா மேடையின் ஓரத்தில் இருந்த சேரில் அமர்ந்தார். கூட்டத்தில் TN கவர்னர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோருவது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவர்னரை கண்டித்து, ஏப்.26-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
Similar News
News December 1, 2025
சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News December 1, 2025
ராஜ்யசபா புதிய உயரத்தை எட்டும்: தம்பிதுரை

ராஜ்யசபாவில் பேசிய அதிமுக MP தம்பிதுரை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். மேலும், ‘உங்கள் தலைமைப்பண்பால் ராஜ்யசபா சிறந்த நாள்களை காணும் என நம்புகிறேன். அது, இந்தியாவை ஒரு புதிய உயரத்திற்கு அழைத்து செல்லும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக பிரச்னைகளை பேச அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
News December 1, 2025
அண்ணாமலை கொடுக்கும் கல்யாண கிஃப்ட்டின் ரகசியம்?

அண்ணாமலை, தான் பங்கேற்கும் அனைத்து திருமணங்களிலும் ஒரே மாதிரியான கிஃப்ட்டை தான் கொடுக்கிறார். அது என்னவாக இருக்கும் என்றே பலரும் தேடி வருகின்றனர். திருமணம் மங்களகரமானது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை நேரடியாக வாங்கி அதை பதப்படுத்தி, அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து பரிசளித்து வருகிறாராம். இந்த ஐடியாவும் நல்லா இருக்கே.. நாமளும் பாலோ பண்ணலாம்!


