News April 20, 2025

வரிசையின் ஓரத்தில் அமர்ந்த மல்லை சத்யா..

image

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த துரை வைகோ மேடையில் அமர வைக்கப்பட்டார். மல்லை சத்யா மேடையின் ஓரத்தில் இருந்த சேரில் அமர்ந்தார். கூட்டத்தில் TN கவர்னர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோருவது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவர்னரை கண்டித்து, ஏப்.26-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

Similar News

News November 23, 2025

உதயநிதிக்கு போதிய புரிதல்: அண்ணாமலை

image

விளையாட்டுதுறை அமைச்சராக உதயநிதி இதுவரை என்ன சாதனை செய்தார் என தெரியவில்லை என்று அண்ணாமலை கேள்வியெழுப்பினார். பொதுமக்களிடம் பெற்ற புகார் மனுக்களில் எத்தனை தீர்த்து வைத்தோம் என்பதை பற்றியெல்லாம் DCM பேசமாட்டார் என்ற அவர், ஆனால் சமஸ்கிருதம் செத்து மொழி என பேசியதை திரும்பி திரும்பி பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் சாடினார். மேலும் பொது விவகாரங்கள் பற்றிய புரிதல் அவருக்கு இல்லை எனவும் சாடினார்.

News November 23, 2025

தமிழ்நாட்டில் ஓர் செவ்வாய் கிரகம் PHOTOS

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக்காடு, இந்தியாவின் மிகவும் ஆச்சரியமான நிலப்பரப்புகளில் ஒன்றாக உள்ளது. சுமார் 500 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சிவப்பு பாலைவனம், இரும்பு நிறைந்த மணல் மற்றும் நகரும் குன்றுகளுடன் கிட்டத்தட்ட செவ்வாய் கிரகத்தைப் போலவே இருக்கிறது. இந்த பகுதி, ஒருகாலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் போட்டோஸ் மேலே உள்ளன. SHARE

News November 23, 2025

தைவானை தாக்க தயாராகும் சீனா

image

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!