News March 23, 2024
இந்தியாவிடம் கடன் கேட்கும் மாலத்தீவு அதிபர்

மாலத்தீவில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடரும் முய்சு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியா மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக தொடரும். மாலத்தீவுக்கு இந்தியா கடனுதவி வழங்க வேண்டும்’ என்றார். கடந்தாண்டு மாலத்தீவுக்கு 400 மில்லியன் டாலர்களை இந்தியா கடனாக அளித்திருந்தது.
Similar News
News April 19, 2025
குருப்பெயர்ச்சி: 6 ராசியினர் மிகுந்த கவனம் தேவை

குரு பகவான் விரைவில் ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிஷம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். ஆதலால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க ஜோதிட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிலர் முதுகில் குத்தவும், பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக ஜோதிடர்கள் குறிப்பிட்டுள்ளனர். SHARE IT.
News April 19, 2025
கைதான கொஞ்ச நேரத்திலேயே நடிகருக்கு ஜாமின்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, நடிகர் <<16150071>>ஷைன் டாம் சாக்கோ<<>>விற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட அடுத்தகட்ட நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அவர் கைதாவது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு வழக்கில் அவர் 2 மாதம் சிறையில் இருந்தார்.
News April 19, 2025
இளைஞரை நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி சித்ரவதை

உ.பி.யில் இளைஞரை நிர்வாணப்படுத்தி மாட்டு வண்டியில் கட்டி இழுத்து சென்று கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். விஷேஷ்வர்கஞ்சில் 22 வயது இளைஞர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடித்து சென்ற மக்கள், ஆடையை களைந்து நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி இழுத்து சென்றனர். அப்போது அவரை சிலர் கடுமையாகத் தாக்கினர். அவரின் சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.