News September 27, 2024
Joint Ventureஇல் இணையும் மஹிந்திரா – ஃபோக்ஸ்வேகன்

மஹிந்திரா, ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் வணிக ரீதியான இணைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் ஸ்கோடா தனது 50% உரிமப் பங்குகளை மஹிந்திராவுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது. மேலும், மஹிந்திரா சுமார் ₹5,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை குறைவதுடன், மஹிந்திரா கார்களின் உற்பத்தி திறனும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News August 25, 2025
இதுவரை இல்லாத உச்சம்.. ₹5000 உயர்வு

வெள்ளி விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 20-ம் தேதி வெள்ளி விலை கிராமுக்கு ₹125-க்கும், கிலோ வெள்ளி ₹1,25,000-க்கும் விற்பனையானது. ஆனால், கடந்த 5 நாள்களில் மட்டும் கிராமுக்கு ₹5, கிலோவுக்கு ₹5000 உயர்ந்துள்ளது. வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ளதால், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.
News August 25, 2025
அதிமுக கூட்டணியை மாற்றுவது நல்லது: திருமா

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து என நாங்கள் சொன்னபோது விழுந்து புரண்டிய அக்கட்சியினர், தற்போது அதே கருத்தை விஜய் கூறும்போது அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்க ஒரே வழி, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதுதான். இல்லையென்றால் அதிமுகவை காப்பாற்ற முடியாது என்றார்.
News August 25, 2025
IPL 2026-லும் தோனி வேண்டும்: வன்ஷ் பேடி

2026 IPL சீசனிலும் தோனி விளையாட வேண்டும் என்று தான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சென்னையும் விரும்புவதாக CSK வீரர் வன்ஷ் பேடி கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில், அணிக்கு தோனி அளிக்கும் பங்களிப்பு & அவரது வழிநடத்தும் திறனை யாராலும் ஈடு செய்ய முடியாது என புகழ்ந்துள்ளார். கடந்த சீசனில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட CSK மீண்டு வர வேண்டும், தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.