News September 14, 2024
மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாற்றிய அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. நேற்றுடன் காவல் முடிந்த நிலையில் தற்போதுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 26, 2025
பிடிகொடுக்காத EPS.. ரூட்டை மாற்றிய KAS

EPS பிடிகொடுக்காததாலேயே, செங்கோட்டையன் தனது அரசியல் பயணத்தை TVK பக்கம் திருப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீக்கப்பட்டவர்களை இணைக்குமாறு கெடுவிதித்த KAS-ன் கட்சி பொறுப்பை EPS பறித்தார். தேவர் ஜெயந்தியில் TTV, OPS உடன் இணைந்து பேட்டி கொடுத்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ADMK இணைப்பு முயற்சிகள் பலனளிக்காததால், இறுதியாக தவெகவில் இணையும் முடிவை KAS எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News November 26, 2025
அயோத்தியில் தர்மக்கொடி ஏற்றம்: PM மோடி

அயோத்தி ராமர் கோயிலில் காவி கொடி ஏற்றப்பட்டுள்ளதால், பல நூற்றாண்டுகளின் வலி முடிவுக்கு வந்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ஏற்றப்பட்டுள்ள தர்மக்கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்றும், இந்திய கலாசாரத்தின் அடையாளம் எனவும் அவர் பேசியுள்ளார். மேலும், ராம பக்தர்களின் 500 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
ஸ்டாலின் விவசாயிகளின் துரோகி இல்லையா? EPS

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு, விவசாயிகள் வயிற்றில் திமுக அடித்ததாக EPS குற்றம்சாட்டினார். மேலும் நெல் ஈரப்பதத்திற்கான வரம்பை, உரிய நேரத்தில் மத்திய அரசின் ஆணையைப் பெற்று உயர்த்த தவறிய CM ஸ்டாலின், விவசாயிகளின் துரோகி இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 39 MP-க்களை வைத்துக்கொண்டு, ஏன் PM-ஐ சந்தித்து ஈரப்பதம் தளர்வு குறித்துப் பேசவில்லை என்றும் EPS கேட்டுள்ளார்.


