News September 14, 2024
மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாற்றிய அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. நேற்றுடன் காவல் முடிந்த நிலையில் தற்போதுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 5, 2026
ஜனநாயகன் Effect.. டிரெண்டிங்கில் பகவந்த் கேசரி!

அரசியல் Portion-ஐ தவிர்த்து, ‘ஜனநாயகன்’ படம் 80% ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பது உறுதியாகி விட்டது. பாலைய்யா நடிப்பில் வெளிவந்து தெலுங்கில் பெரிய ஹிட்டடித்த இந்த படம், தற்போது தமிழ் ரசிகர்களிடமும் கவனத்தை பெற்றுவிட்டது. Amazon Prime OTT-ல் ‘பகவந்த் கேசரி’ தான் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. நீங்க பகவந்த் கேசரி பாத்தாச்சா.. படம் எப்படி இருக்கு?
News January 5, 2026
அசாமில் அதிகாலையில் நிலநடுக்கம்!

அசாமின் மத்தியப் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றின் தென்கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம்(NCS) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 5, 2026
கடன், தடை, தோல்வியை விரட்டும் எள் தீபம்!

சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது கடன், தோல்வி, வாழ்வில் தடை ஆகியவற்றை நீக்க உதவும் என கூறுகின்றனர். எள்ளில் இருந்து பெறப்பட்ட நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவதே மிகுந்த மனமகிழ்ச்சியை தரும். காலையில் குளித்துவிட்டு இந்த மந்திரத்தை 9 (அ) 108 முறை சொல்வது விசேஷமானது ‘ஓம் சனைச்சராய வித்மஹே சூரிய புத்ராய தீமஹி தன்னோ மந்தப் ப்ரசோதயாத்’. எள்ளை நேரடியாக நெருப்பில் இடுவதை தவிர்க்கலாம். SHARE IT.


