News September 14, 2024
மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாற்றிய அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. நேற்றுடன் காவல் முடிந்த நிலையில் தற்போதுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 1, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 454 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை மனு, விதவை உதவித்தொகை மனு, விபத்து நிவாரணத் தொகை மனு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு மனு உள்ளிட்ட 454 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
நடிகை சமந்தாவின் சொத்துகள் இவ்வளவு கோடியா..!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? பல பெரிய நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர், விளம்பரங்கள், திரைத்துறை சம்பளம் என தற்போதைய நிலவரப்படி தோராயமாக ₹110 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவரிடம், என்ன சொத்துக்கள் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 1, 2025
முகத்தில் இத தடவுறீங்களா? ALERT!

முகத்தில் எலுமிச்சை சாறை தடவுவதால் நன்மை கிடைப்பதை விட சருமத்துக்கு பல தீங்குகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிம்பிள்ஸை அதிகமாக்கும், சருமத்தின் இயற்கையான pH சமநிலையை சீர்குலைக்கிறதாம். எனவே எலுமிச்சை சாறை முகத்தில் தடவுவதற்கு பதிலாக அதனை குடித்தால் நன்மை கிடைக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.


