News September 14, 2024
மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாற்றிய அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. நேற்றுடன் காவல் முடிந்த நிலையில் தற்போதுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
உரிமைகளை கேட்போர் மதவாதிகளா? தமிழிசை

மத்தியில் திமுகவினர் அமைச்சராக இருந்தபோது ஏன் மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி சிந்திக்கவில்லை என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இஃப்தார் விருந்து, கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஸ்டாலின், எத்தனை குடமுழுக்குகளில் கலந்து கொண்டீர்கள் என்றும் காட்டமாக கேட்டுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உரிமையை தட்டி கேட்பவர்களை மதவாதிகள் என்று முத்திரை குத்துவதாகவும் தமிழிசை விமர்சித்துள்ளார்.
News December 7, 2025
உலகின் மிக நீளமான விமான பயணம்!

உலகின் மிக நீளமான பயணிகள் விமான பயணத்தை சீனாவின் China Eastern Airlines நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரம் முதல் அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரம் வரை மொத்தம் 29 மணி நேரம் இந்த பயணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,681 கிமீ தூரம் பறக்கும் இந்த விமானம், இடையில் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் மட்டும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
‘அப்பா SORRY.. நான் சாகப் போகிறேன்’

‘அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் தாங்க முடியாது. என் சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை, நான் மட்டுமே பொறுப்பு’. ம.பி., போபாலில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த சுஜாதாவின்(27) கடைசி வரிகள் இவை. தீராத நோய் பாதிப்பில் இருந்த அவர், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகம். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள் நண்பர்களே!


