News April 2, 2025
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி காலமானார்!

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான நிலம்பென் பாரிக் (92) காலமானார். மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். காந்திக்கும் அவரின் மூத்த மகனுக்கும் இடையே இருந்த சிக்கலான உறவு குறித்து இவர் எழுதிய ‘காந்தி’ஸ் லாஸ்ட் ஜிவெல்: ஹிராலால் காந்தி’ மிக பிரபலம். RIP நிலம்பென் பாரிக்.
Similar News
News October 14, 2025
நானா இப்படி நடித்தேன்?

நானா இப்படி நடித்தேன் என ஆச்சரியப்படும் அளவிற்கு ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘பிரேமம்’ படத்தில் நடித்ததை போன்ற ஒரு பேரார்வத்தை, இந்த படத்தில் நடித்த போது தன்னால் உணர முடிந்ததாகவும், இப்படத்திற்கு பிறகு புதிதாக பிறந்தது போல உணருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், செங்கல் தயாரிப்பு, உழவுப்பணி இதையெல்லாம் கற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
4 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வருகிற 19-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியில் செல்லும்போது கவனமாக செல்லவும்.
News October 14, 2025
Bussiness Roundup: தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு

*வாரத்தின் முதல் நாளான நேற்று, இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ₹88.67 ஆனது. *நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 14 லட்சம் கிலோ குறைந்துள்ளது. *அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த, இந்திய அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளது. *தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.