News April 2, 2025
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி காலமானார்!

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான நிலம்பென் பாரிக் (92) காலமானார். மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். காந்திக்கும் அவரின் மூத்த மகனுக்கும் இடையே இருந்த சிக்கலான உறவு குறித்து இவர் எழுதிய ‘காந்தி’ஸ் லாஸ்ட் ஜிவெல்: ஹிராலால் காந்தி’ மிக பிரபலம். RIP நிலம்பென் பாரிக்.
Similar News
News November 13, 2025
7 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 18-ம் தேதி வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
News November 13, 2025
குளிர்காலத்தில் உணவை சூடுபடுத்துகிறீர்களா?

சுடச்சுட உணவை சாப்பிட வேண்டும் என சிலர், குளிர்காலத்தில் மீண்டும் மீண்டும் உணவை சுட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால், இது உடல் ஆரோக்யத்தை பாதிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அடிக்கடி சுட வைப்பதால் உணவில் பாக்டீரியா, பூஞ்சைகள் வளரும் வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் செரிமான பிரச்னைகள், வாந்தி, கல்லீரல் பாதிப்பு, சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாவதாக கூறுகின்றனர்.
News November 13, 2025
International Roundup: பாலியல் குற்றவாளியுடன் டிரம்ப்

*ஈராக் தேர்தலில் தற்போதைய PM முகமது ஷியா அல்- சூடானி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு. *ரஷ்யாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க இன்னும் அதிக அழுத்தம் தர ஜி7 நாடுகள் முடிவு. *பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் டிரம்ப் இருந்த ஆவணங்களை ஜனநாயக கட்சி வெளியிட்டது. *குவாண்டம் கம்ப்யூட்டருக்கான சோதனை சிப்பை (LOON) கண்டுபிடித்துள்ளதாக IBM அறிவிப்பு. *சூடான் உள்நாட்டு போரை நிறுத்த ஐநா அழைப்பு.


