News November 23, 2024
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது: ராகுல்

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், மகாராஷ்டிர தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்யும் எனக் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்த அந்த மாநில மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ள அவர், தேர்தல் வெற்றிக்காக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
காதலில் நீங்கள் எந்த வகை என்று கூறுங்களேன் ❤️❤️

திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு என்பதை தாண்டி, எதார்த்தமான பல விஷயங்கள் அதில் உள்ளன. நிலம், பொருளாதாரம், இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை ஒரு தம்பதியின் மனநிலையை அதிகமாக இயக்குகிறது. அப்படிப்பட்ட காதலின் 6 நிலைகளை அறிய மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். நீங்கள் அதில் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லிவிட்டு, உங்கள் கணவர்/ மனைவியிடம் மனம்விட்டு கூறுங்கள். All is Love
News December 23, 2025
நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. டிச.24, 25 தேதிகளில் சில கடலோர மாவட்டங்களில் 26, 27 தேதிகளில் தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். டிச.26 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும்.
News December 23, 2025
₹8 கோடி அபேஸ்.. தற்கொலைக்கு முயன்ற Ex IPS!

சைபர் மோசடியில் ₹8 கோடி இழந்த பஞ்சாப் Ex IPS அமர் சிங் சஹால், 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆன்லைன் மோசடி, அதிக லாபம் என Whatsapp, telegram-ல் மோசடி கும்பல் அவரிடம் இருந்து பணத்தை சுருட்டியுள்ளது. அமர் தற்போது ICU-ல் உள்ளார். IPS அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.


