News May 16, 2024

3 உயிர்களைக் காப்பாற்றிய மகான்

image

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கருணாகரன் (30) மே 11ஆம் தேதி விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர், அவருடைய குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இருவேறு நபர்களுக்கு, கல்லீரல் ஒருவருக்கு என தானம் செய்யப்பட்டது. அனைவரும் நலமாக இருக்கின்றனர்.

Similar News

News December 4, 2025

எப்போதும் உடல் சோர்வாக இருக்கிறதா?

image

தூக்கமின்மை, முறையற்ற உணவு, மன அழுத்தம் ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுகின்றன. குறிப்பாக நாள் முழுவதும் உடல் சோர்வு, பலருக்கும் பெரும் பிரச்னையாக உள்ளது. உடல் சோர்வில் இருந்து விடுபட, சத்தான உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். அதன்படி, என்னென்ன சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 4, 2025

தட்கல் டிக்கெட் எடுக்க.. இனி OTP கட்டாயம்

image

ரயில் நிலையங்களில் நேரடியாக தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு OTP கட்டாயமாக்கப்படவுள்ளது. தட்கல் புக்கிங்கில் மோசடியை தவிர்க்க பயணியின் மொபைலுக்கு OTP அனுப்பும் முறை, சோதனை முயற்சியாக வட மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. தங்களது மொபைலுக்கு வரும் OTP-ஐ பயணிகள், டிக்கெட் கவுன்டர் அலுவலரிடம் கூறினால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

News December 4, 2025

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: மீளுமா இங்கிலாந்து?

image

2-வது ஆஷஸ் டெஸ்ட் இன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்த ENG, BAZBALL அணுகுமுறையை கைவிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிங்க் பால் பயன்படுத்தி நடக்கும் இந்த பகல்-இரவு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் ஆஸி., 14 பிங்க் பால் டெஸ்ட் விளையாடி ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது. புதிய யுக்தியுடன் ENG களமிறங்கினால், அது ஆஸி.,க்கு சவலாக அமையக்கூடும்.

error: Content is protected !!