News May 16, 2024
3 உயிர்களைக் காப்பாற்றிய மகான்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கருணாகரன் (30) மே 11ஆம் தேதி விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர், அவருடைய குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இருவேறு நபர்களுக்கு, கல்லீரல் ஒருவருக்கு என தானம் செய்யப்பட்டது. அனைவரும் நலமாக இருக்கின்றனர்.
Similar News
News November 5, 2025
ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும், அதே சமயத்தில் அறிவியல் உண்மையாக இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News November 5, 2025
தமிழக அரசின் தலையில் நறுக்கு நறுக்கு: விஜய்

நமது குடும்பத்தினர் உயிரிழந்ததால், அமைதிகாத்து வந்தோம். ஆனால், இந்த அமைதியை பயன்படுத்தி திமுகவினர் வன்மத்தை கக்கினர் என்று விஜய் விமர்சித்துள்ளார். எஸ்ஐடி அமைக்க ஐகோர்ட் உத்தரவிட்டதை குதூகலத்துடன் கொண்டாடினர். ஆனால், தனிநபர் ஆணைய விவகாரத்தில் தமிழக அரசின் தலையில் சுப்ரீம் கோர்ட் ‘நறுக்கு நறுக்கு’ என்று கொட்டி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
CM ஸ்டாலினை அட்டாக் செய்தார் விஜய்

தவெக பொதுக்குழுவில் ‘குறுகிய மனம் கொண்ட முதலமைச்சருக்கு சில கேள்விகள்’ எனக் குறிப்பிட்டு ஸ்டாலினை விஜய் அட்டாக் செய்தார். கரூர் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின், தவெகவிற்கு எதிராக வன்மத்தை கக்கியதாகவும், பொய்மூட்டைகளையும், அவதூறுகளையும் தெரிவித்ததாகவும், அரசியல் காழ்ப்புணர்வுடன் நேர்மையற்று குற்றம் சாட்டியதாகவும் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.


