News February 26, 2025
மகா சிவராத்திரி: கண் விழித்தே ஆக வேண்டிய ராசிகள்

சிவபெருமானுக்கு கொண்டாடப்படக் கூடிய முக்கியமான விழாக்களில் மகா சிவராத்திரி முதன்மையானதாகும். அனைத்து ராசிக்காரர்களும் இந்நாளில் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். குறிப்பாக, சனியின் பார்வையில் வரக்கூடிய ராசிகள் இந்நாளில் விழித்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதன்படி, மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், ஜென்ம சனிக்குள் நுழையப்போகும் மீன ராசிக்காரர்கள் கட்டாயம் விழிக்க வேண்டும்.
Similar News
News February 27, 2025
பாக். கிரிக்கெட் வீரர் பஹார் ஜமான் ஓய்வு பெற முடிவு

உடல்நல பிரச்னை காரணமாக சாம்பியன்ஸ் டிராபியுடன் பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன் பஹார் ஜமான், ODI கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் ஓய்வு முடிவை அவர் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2017 CT இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான அவரின் சதமே பாக்., பட்டம் வெல்ல காரணமாக அமைந்தது.
News February 27, 2025
தாய் மொழியை காக்க போராடும் மாநிலங்கள்

பஞ்சாப் மாநிலத்தில் CBSE உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் தெலங்கானாவில் அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு தீவிரமாக அமல்படுத்தி வரும் நிலையில், மாநில அரசுகள் தங்கள் மாநில மொழியை கட்டாயமாக்கி வருகின்றன.
News February 26, 2025
ஏன் புதிய பென்ஷன் திட்டம்?

நாட்டில் அரசு & சில தனியார் துறை ஊழியர்களுக்கு மட்டுமே பென்ஷன் கிடைக்கிறது. தவிர, அடல் பென்ஷன் யோஜனா, PM ஷ்ரம் யோகி மந்தன் ஆகிய அரசு பென்ஷன் திட்டங்கள் உள்ளன. ஆனால், டெலிவரி பணியாளர்கள், கட்டுமானம், வீட்டுவேலை போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்த பென்ஷன் பாதுகாப்பு இல்லை. இதனால், 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில், புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.