News April 18, 2024
மதுரை எய்ம்ஸ்-க்கு மாநில அரசிடம் அனுமதி பெறவில்லை

சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் கட்டுமானப் பணிகளைச் சட்டவிரோதமாகத் தொடங்கியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுவரை மாநில அரசிடம் அனுமதி பெறவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 11, 2025
அவரை கேட்டுதான் படங்களுக்கு OK சொல்கிறாரா துருவ்?

‘பைசன்’ வெற்றிக்குப் பிறகு துருவ் விக்ரம் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. தனது அடுத்த படக்கதையையும், இயக்குநரையும் மாரி செல்வராஜே முடிவு செய்யட்டும் என்று தனக்கு வரும் கதைகள் அனைத்தையும் அவருக்கே ரீடைரக்ட் செய்கிறாராம். இதை சில இயக்குநர்கள் விரும்பவில்லையாம். இன்னொரு பக்கம், கதை சொல்ல வருபவர்களிடம் தனது சம்பளத்தையும் உயர்த்தி கேட்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News November 11, 2025
குண்டு வெடித்த இடத்தில் கிடைத்த முதல் தடயம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் தடயமாக சம்பவ இடத்தில் புல்லட் ஒன்று சிக்கியுள்ளது. இதை வைத்து, இந்த புல்லட் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எது, அதனுடைய உரிமையாளர் யார், துப்பாக்கி சூடு ஏதும் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கார் உரிமையாளரிடம் விசாரணை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
ஜடேஜாவுக்கும் RR அணிக்கும் தொடரும் 15 ஆண்டுகால பகை!

2008-ல் RR அணி கண்டுபிடித்த வீரர்தான் ஜடேஜா. ஆனால், 2010-ல் அவர் வேறு அணிக்கு மாற முயற்சி எடுத்துள்ளார். இதுகுறித்து RR அணி, BCCI-யிடம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தது. இதனால் ஜடேஜாவுக்கு 2010 IPL-ல் விளையாட BCCI தடை விதித்திருந்தது. இது நடந்து முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதன் காரணமாக, ஜடேஜா RR அணியில் இணையமாட்டார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


