News March 16, 2024
மதுரை: 322 வாகனங்களுக்கு அபராதம்

மதுரையில் விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது போக்குவரத்து மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து 10 இடங்களில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் 15, காப்பீடு செய்யாமை 21, வாகனத்தில் அதிக உயரம் 37, சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றுதல் 39, இதர வழக்குகள் 189 என மொத்தம் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் ரூ.2,68,500 விதிக்கப்பட்டது.
Similar News
News September 22, 2025
மதுரை ELCOT-ல் வேலை ரூ.1 லட்சம் சம்பளம்

மதுரை மாவட்டத்தில் உள்ள எல்காட் ஐடி பூங்காவில் 100க்கு மேற்பட்ட டேட்டா ஆபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 18 முதல் 25 வயது உள்ளவர்கள் UG.யில் B,Ed, B.A, B.com படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News September 22, 2025
மதுரை: ஆசிரியர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு

மேலுார் அண்ணா காலனி மும்தாஜ் 56, கோட்டநத்தாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று மும்தாஜ் மதுரை சென்று மாலை வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கிரில், மரக்கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் மரபீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன், வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தன. அவர் மேலுார் போலீசில் புகார் அளித்தார்.
News September 22, 2025
இன்று மதுரை வரும் துணை முதல்வர் உதயநிதி

மதுரை, விருதுநகர் மாவட்ட கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி இன்று (செப்.22) இரவு விமானத்தில் மதுரை வருகிறார்.அங்கிருந்து விருதுநகர் செல்லும் அவர் இரவு அங்கு தங்குகிறார். நாளை (செப்.,23) விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மதுரை திரும்புகிறார். செப்.,24ல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.