News March 16, 2024
மதுரை: 322 வாகனங்களுக்கு அபராதம்

மதுரையில் விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது போக்குவரத்து மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து 10 இடங்களில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் 15, காப்பீடு செய்யாமை 21, வாகனத்தில் அதிக உயரம் 37, சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றுதல் 39, இதர வழக்குகள் 189 என மொத்தம் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் ரூ.2,68,500 விதிக்கப்பட்டது.
Similar News
News August 8, 2025
போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி

மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள செவன்த் டே மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
News August 7, 2025
மதுரையை குஷியில் ஆழ்த்திய அறிவிப்பு..!

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக மதுரையை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் துாய்மையான நகரங்களின் பட்டியலை சமீபத்தில் இந்த அமைச்சகம் வெளியிட்டது. அதில் மதுரை மாநகராட்சிக்கு கடைசி இடம் வழங்கப்பட்டது அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் அதே அமைச்சகத்தால், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மதுரை மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. SHARE IT..!
News August 7, 2025
மதுரையில் இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

மதுரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை 0452-2580259 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.