News October 19, 2025
மெக்காலே கல்வி முறையை விட வேண்டும்: மோகன் பகவத்

இந்தியர்களாகிய நாம் மெக்காலே கல்வி முறையில் தான் கற்றோம் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இதிலிருந்து விடுபட்டால் மட்டுமே, நமது மரபை புரிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார். 1835-ல் அறிமுகமான மெக்காலே கல்விமுறை, ஆங்கிலத்தை இந்தியாவில் திணித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முன்புவரை சமஸ்கிருதம் (அ) அரபிக்கில் உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கல்வி கற்று வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News October 19, 2025
Recipe: தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

சுக்கு, மிளகு, திப்பிலி, சதகுப்பை, சிறுநாகப்பூ, வாய்விடங்கம், கருஞ்சீரகம், சீரகம், லவங்கப்பட்டை, கோரைக் கிழங்கு, மல்லி, சித்தரத்தை, ஓமம், அதிமதுரம், கிராம்பு (தலா 50 gm) ஆகியவற்றை வறுத்து, அரைக்கவும். பின் வாணலியில் வடிக்கட்டிய வெல்லப் பாகினை ஊற்றி, கம்பி பதம் வந்தவுடன் அந்த கலவையை கொட்டி கைவிடாமல் கிளறவும். அதை இறக்கி வைத்து, சூடு ஆறிய பின் நெய் & தேன் விட்டுக் கிளறினால் தீபாவளி லேகியம் ரெடி.
News October 19, 2025
தீபாவளியில் விஜய் சோக முடிவு

கடந்த தீபாவளியன்று ஒரு நாளுக்கு முன்பே தமிழக மக்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், கரூர் துயரத்தால் இந்த முறை தற்போதுவரை விஜய் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும், தவெக சார்பில் தீபாவளி கொண்டாட்டங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். சோகத்தில் ஆழ்ந்துள்ள விஜய், தீபாவளிக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறார்.
News October 19, 2025
குழந்தைகளுக்கு இந்த வயதில் காது குத்துறீங்களா? உஷார்!

குழந்தை பிறந்து குறைந்தது 1 வருடம் கடந்த பிறகுதான் அவர்களுக்கு காது குத்த வேண்டும். இல்லையெனில், புண், தொற்று ஏற்படுவதில் இருந்து நரம்புகள் கூட பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். அத்துடன், காது குத்தும்போது குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். காய்ச்சல், சளி இருந்தால் கூட காது குத்த வேண்டாம். காது குத்தி 6 வாரங்கள் ஆகும் வரை வேறு காதணியை மாற்ற வேண்டாம். பல குழந்தைகளை காக்க SHARE THIS.