News March 1, 2025
எம் சாண்ட் விலை கடும் உயர்வு

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள எம் சாண்ட் விலையை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதால் TN முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் கரூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் எம் சாண்ட் விலை உயர்த்தப்பட்டபோதே, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது TN முழுவதும் கட்டுமானத்திற்கான 1 யூனிட் எம் சாண்ட் விலை ₹3,500ல் இருந்து ₹4,500ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News March 1, 2025
ஸ்ரேயா கோஷல் X தள பக்கம் முடக்கம்

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் X தள பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிப்ரவரி 13ஆம் தேதி முதலே தனது X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரிலுள்ள அந்த கணக்கில் வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 1, 2025
கோவிந்தாவுடன் டைவர்சா? மனைவி விளக்கம்

பாலிவுட் நடிகர் கோவிந்தாவும், மனைவி சுனிதா அகுஜாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து சுனிதா முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். அரசியலில் கோவிந்தா இருப்பதாகவும், இதனால் தனிப்பட்ட வாழ்க்கை,, அரசியலுக்கு என தனித்தனி வீடு இருப்பதாகவும், இதை வைத்து விவாகரத்து என எப்படி கூறலாம் என அவர் கூறியுள்ளார். 2 பேரையும் பிரிக்க யாராலும் முடியாது என்றும் சுனிதா தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
ரேஷன் கடைகளுக்கு இந்த மாதம் 6 நாட்கள் விடுமுறை

ரேஷன் கடைகளுக்கு இந்த மாதத்தில் (மார்ச்) 6 நாட்கள் விடுமுறை ஆகும். மாதத்தில் முதல் 2 வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். அதன்படி, மார்ச் மாதத்தில் முதல் 2 வார வெள்ளி, ஞாயிறு என 4 நாட்கள் கடைகள் திறக்கப்படாது. அதேபோல், மார்ச் 30ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு ஆகும். அன்றைய தினத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். மேலும், மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை. ஆதலால் அன்றைய தினமும் விடுமுறை.