News June 19, 2024
எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது புகாரளித்தது பினாமியா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தனது மனைவி, மகளை மிரட்டி சொத்தை அபகரித்ததாக காவல்நிலையத்தில் கரூரை சேர்ந்த பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார். இவர் புகாரில்தான் பைனான்சியர் கரூர் அன்புநாதனும் கடந்த ஆண்டு கைதானார். இந்த பிரகாஷ், எம்ஆர் விஜயபாஸ்கரின் பினாமி, அவரின் பணத்தில் தனது மனைவி, மகள் பெயரில் பிரகாஷ் சொத்து வாங்கியதே பிரச்னைக்கு காரணமென்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Similar News
News March 25, 2026
வேல்முருகன் துணையாக இருக்க வேண்டும்: அதிமுக

திமுக கூட்டணிக்கு எதிராக இத்தேர்தலை வேல்முருகன் சந்திக்க வேண்டும் என அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளர் தமிழரசு அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகிய வேல்முருகன், அதிமுக ஆட்சி அமைவதற்கு துணையாக இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். திமுக அமைச்சர்கள் செய்த முறைகேடுகளுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி <<19449630>>ஏற்கெனவே வேல்முருகன்<<>> பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் <<-se>>#TNElection2026<<>>
News March 25, 2026
போர்.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

மேற்காசிய போர் பதற்றத்துக்கு இடையே, ரஷ்யாவிலிருந்து 60 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வாங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடையினை US தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கிடைக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.
News March 25, 2026
சோனியா காந்திக்கு என்ன ஆச்சு? ரிப்போர்ட்

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சர் கங்காராம் ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சோனியா காந்திக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ள நிலையில் காற்று மாசு, குளிர் காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது; அவரது உடல்நிலையை தற்போது டாக்டர்கள் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.


