News April 5, 2025
மும்பையை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி…!

மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் குவித்தது. மார்ச்(60), மார்க்ரம் (53) ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி இறுதிவரை போராடியும் வெற்றி பெற முடியவில்லை. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட் வீழ்த்தியும் பயனில்லை.
Similar News
News November 22, 2025
தென்காசி: லாரி மோதி 11 மாடுகள் பலி!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தரணி சக்கரை ஆலை அருகே விஸ்வநாதப்பேரி பகுதியை சேர்ந்த பேச்சியப்பன் என்பவருக்கு சொந்தமான மாடுகளை இன்று கடையநல்லூர் கொண்டு செல்லும் வழியில், தரணி அருகே செங்கலை ஏற்றி வந்த கனரக வாகனம் மோதியது. இதில், 20 மாடுகள் பலத்த காயம் அடைந்தன. 11 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 22, 2025
இன்று 13 மாவட்டங்களில் கனமழை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளையும், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
News November 22, 2025
இனி அரசல் புரசல் இருக்காது: ப.சிதம்பரம்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் <<18302354>>காங்கிரஸ்<<>> கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


