News February 12, 2025
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய L&T சேர்மன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739345220195_1173-normal-WIFI.webp)
L&T சேர்மன் சுப்ரமணியம் மீண்டும் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களால், கட்டுமான பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும், இது நாட்டின் உட்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அவர் கூறியது சர்ச்சையானது.
Similar News
News February 12, 2025
பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739353068673_1246-normal-WIFI.webp)
கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் பூமிக்கு திரும்பவுள்ளார். மார்ச் 25ஆம் தேதிக்கு பதிலாக 12ஆம் தேதியே விண்ணில் ஏவப்படும் SpaceX விண்கலம், புட்ச் வில்மோர் & சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரவுள்ளது. இவர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டதற்கு காரணம் பைடன்தான் என்று USAவின் தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
News February 12, 2025
எனது தாத்தா ஒரு காதல் மன்னன்: சிரஞ்சீவி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739350737569_1173-normal-WIFI.webp)
நடிகர் சிரஞ்சீவி தனது தாத்தாவை வைத்து Fun செய்துள்ளார். வீட்டில் 2 பாட்டிகள் இருந்த போதும், தாத்தாவுக்கு போர் அடித்தால், அவர் வேறு பெண்களை தேடிச் செல்வார் எனவும், அவர் ஒரு காதல் மன்னன் என்றும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே, தாத்தாவைப் போல் வந்து விடாதே என்று கூறி தன்னை வளர்த்ததாகவும், இருப்பினும் அவர் செய்த சில நல்ல காரியங்களால் தான் இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News February 12, 2025
பெண் குழந்தைகள் குறித்து சிரஞ்சீவி சர்ச்சை கருத்து
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739350126665_1173-normal-WIFI.webp)
பெண் குழந்தைகள் குறித்து சிரஞ்சீவி பாலின பாகுபாடான கருத்து கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. வீட்டில் பேத்திகளோடு இருக்கும் போது, பெண்கள் விடுதிக்குள் இருப்பது போன்று தோன்றுவதாகவும், அதனாலேயே ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து, தங்களது மரபைத் தொடர வழி செய் என்று ராம் சரணிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ராம் மீண்டும் மகளை பெற்றெடுப்பாரோ என பயமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.