News March 6, 2026
LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ்க்கு(LPG) தட்டுப்பாடு வராமல் இருக்க LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. LPG-க்கு தேவையான அனைத்து எரிவாயுவையும் 3 அரசு நிறுவனங்களுக்கு (IOC, BPCL, HPCL) மட்டும் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போர் சூழலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ள நிலையில், அதை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Similar News
News April 7, 2026
பாகிஸ்தான் துண்டு துண்டாகிவிடும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் போர் மூண்டால், கொல்கத்தாவை தாக்குவோம் என பாக்., அமைச்சர் குவாஜா பேசியதற்கு ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். பாக்., இதுபோன்ற ஆத்திரமூட்டும் கருத்துக்களை சொல்லக்கூடாது என அவர் கூறியுள்ளார். 55 ஆண்டுகளுக்கு முன்பு பாக்., 2-ஆக பிரிக்கப்பட்டதை நினைவுப்படுத்திய அவர், தற்போது பெங்கால் மீது கைவைத்தால் பாக்., எத்தனை துண்டுகளாகும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் எனவும் பேசியுள்ளார்.
News April 7, 2026
தமிழக தேர்தலுக்கு ₹1,302 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக ₹1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்த தொகையானது 2021 சட்ட தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டதை விட ₹507 கோடி அதிகமாகும். தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏப்.13-ம் தேதி துணை ராணுவப் படையினர் கூடுதலாக வரவுள்ளதாகவும் அவர் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News April 7, 2026
விரைவில் விஜய்யின் நேர்காணல்?

அரசியல் களம் கண்டு 3 ஆண்டுகள் ஆகியும் விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் பேட்டியளிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏப்.14-ல் சுமார் 4 மணி நேரத்திற்கு இந்த பேட்டியை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாம். சினிமாவில் இருந்து விலகல், அரசியல் பயணம், எதிர்கால திட்டங்கள் குறித்து அதில் அவர் விவரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


