News August 23, 2025
தென்னகத்தின் அன்பே என்னை மாற்றியது: அனுராக் காஷ்யப்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டை ‘டாக்ஸிக்’ உலகம் என விமர்சித்திருந்தார் அனுராக் காஷ்யப். இந்நிலையில், பாலிவுட் உலகம் தன்னை தொடர்ந்து புறக்கணித்ததாக கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது குடிப்பழக்கத்தை பாலிவுட் குறைகூறிக் கொண்டே இருந்ததாக கூறிய அவர், தென்னகத்தின் அன்பால் குடியை நிறுத்தியது மட்டுமல்லாமல், உடற்பயிற்சியை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 31, 2026
விஜய் Vs உதயநிதி… பாதுகாப்பில் பாரபட்சமா?

விஜய்யின் கொளத்தூர் பிரசாரத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பு EC-யிடம் புகார் அளித்துள்ளது. அதற்கு பதிலடியாக திருவண்ணாமலையில் பெரும் கூட்டத்திற்கு நடுவே DCM உதயநிதி பிரசாரம் செய்ததை திமுகவினர் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இருவரின் பிரசார வாகனங்களின் முன் நிற்கும் போலீசாரின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, இதுதான் சமமான பாதுகாப்பா என தவெகவினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
News March 31, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை (ஏப்.1) தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
News March 31, 2026
திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்ய விஜய் தயார்!

2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய் நேற்று பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் நாளை மறுநாள் பிரசாரம் செய்ய ECI-யிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. காலையில் மனுதாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். பெரம்பூரில் அவருக்கு சரியான போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.


