News March 17, 2024

ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

image

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

Similar News

News November 16, 2025

புதுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் கல்வி சார்ந்த கூட்டம்

image

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின், சுப்பிரமணிய பாரதி தமிழியல் பள்ளி சார்பாக, இன்று புலவர் குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆய்வுப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களை புதுப்பித்தல் போன்றவை கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாக கருதப்படுகிறது. மேலும் இக்கூட்டமானது தமிழியல் பள்ளியின் கல்வித் தரத்தையும், கலாச்சார மேம்பாட்டையும் உறுதி செய்வதற்கான திட்டம் சார்ந்து நடத்தப்பட்டது.

News November 16, 2025

புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

image

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்ட செய்தி குறிப்பில், வானிலை ஆய்வுமைய தகவலின்படி, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ஆகையால் அதிகன மழை பெய்யக்கூடும் நிலையில், காற்று மணிக்கு 55கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று, புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 9488981070 ஆகிய எண்களை தொடர்புகொள்ள அறிவித்தார்.

error: Content is protected !!