News March 17, 2024

ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

image

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

Similar News

News December 19, 2025

புதுவை: ஊக்கத் தொகை பட்டியல் வெளியீடு

image

தோட்டக்கலை இணை வேளாண் இயக்குநர், “வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன்படி மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.7,000, தென்னை சாகுபடி பெயர் பட்டியலில் உள்ளக் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.” என அறிவித்துள்ளார்.

News December 19, 2025

புதுச்சேரி மின்துறை முக்கிய அறிவிப்பு!

image

புதுச்சேரி மின்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “மின் கட்டண நிலுவை உள்ள நுகர்வோர் உடனடியாக நிலுவைத் தொகையை நேரடியாகவோ அல்லது இணையவழி மூலமாகவோ செலுத்த வேண்டும். ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலுவைத் தொகை உள்ளவர்களுக்கு, எந்த விதமான முன் அறிவிப்பும் இன்றி டிச.22 முதல் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இது மின்சாரத் துறை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 19, 2025

புதுவையில் ஊக்கத் தொகை உயர்வு!

image

புதுச்சேரியில், 1 அல்லது 2 பெண் குழந்தைகளைப் பெற்ற குடும்பங்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கும் ஊக்கத் தொகை தரப்படுகிறது. இதில் குறிப்பாக ரூ.30 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என தரப்பட்ட ஊக்கத்தொகை தற்போது ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என புதுவை அரசு சார்பாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!