News March 17, 2024
ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
Similar News
News September 3, 2025
புதுச்சேரி: உதவித் தொகை வழங்கிய முதல்வர்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று 72 இளநிலை வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகையாக, ரூ.86 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்ட செயலர் கேசவன், சட்டத்துறை சார்பு செயலர் ஜானாஸ் ரபி என்கிற ஜான்சி வழக்கறிஞர், சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
News September 3, 2025
புதுச்சேரி: 21 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பணிபுரியும் 21 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. புதுச்சேரி அரசு இதனை தொடர்ந்து திருக்கனூர் அரசு பெண்கள் ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் கற்பகாம்பாள் அவர்களுக்கு, மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கிறது.
News September 3, 2025
புதுச்சேரி: தமிழில் கையொப்பமிட்ட வடமாநில காவல் அதிகாரி

புதுச்சேரி, உப்பனாறு மேம்பாலம் கட்டும் பணிக்காக வரும் 4ஆம் தேதி காமராஜ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில் போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் ரட்சனா சிங் தமிழில் கையொப்பமிட்டு அசத்தியுள்ளார். வட மாநிலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி தமிழில் கையொப்பமிட்டுள்ளது பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.