News March 17, 2024
ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
Similar News
News December 18, 2025
புதுவை: தீவிர போலியோ சொட்டு மருந்து குறித்த ஆலோசனை

காரைக்கால் மாவட்டத்தில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துணை மாவட்ட ஆட்சியர் செந்தில்நாதன் தலைமையில், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர். சிவராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இதற்காக காரைக்கால் முழுவதும் 79 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
News December 18, 2025
புதுவை: LJK கட்சியில் இணைந்த பிக் பாஸ் நடிகர்

தவெக தலைவர் விஜயிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி LJK-வில் இன்று (டிச.18) இணைந்தார். புதுச்சேரியில், லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, தன்னை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர்கள் லியோகுமார், சுனில்குமார், குமரன் மற்றும் சிவராமன் ஆகியோர் உடன் இணைந்தனர்.
News December 18, 2025
புதுவை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!


