News October 30, 2025

ராகுல் பேசும்போதெல்லாம் தாமரை மலர்ந்தது: அமித்ஷா

image

ஓட்டுக்காக PM மோடி டான்ஸ் கூட ஆடுவார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு தேர்தலில், ராகுல் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் தாயாரை ராகுல் அவமதித்தார், பலமுறை இழிவான முறையில் பேசியுள்ளார் என்றும் கூறினார். ஆனால், ராகுல் இவ்வாறு இழிவாக பேசும் ஒவ்வொரு முறையும் தாமரை மலர்ந்துள்ளது என்று அமித்ஷா தெரிவித்தார்.

Similar News

News October 30, 2025

கலிலியோ பொன்மொழிகள்

image

*உங்களால் ஒரு மனிதனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க முடியாது, அவன் அதை தனக்குள்ளே தேடிக்கொள்ள மட்டுமே உதவ முடியும்.
*அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே, ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும்.
*உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.
*அளவிடக்கூடியதை அளவிடுங்கள், அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள்.

News October 30, 2025

ராமரே இல்லை என காங்., கூறுகிறது: யோகி ஆதித்யநாத்

image

கடவுள் ராமர் என்பவரே இல்லை என கூறும் காங்., இறைவனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக உ.பி., CM யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். ராமரின் தேரை லாலு பிரசாத் யாதவ்வின் RJD நிறுத்தியதாகவும், சமாஜ்வாதி கட்சி ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கடுமையாக சாடினார். பிஹார் தேர்தல் பிரசாரம் கடும் மோதல் போக்கில் உள்ள நிலையில், மகாபந்தன் கூட்டணியை தாக்கி யோகி கூறியது பேசுபொருளாகியுள்ளது.

News October 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 504 ▶குறள்: குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ▶பொருள்: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.

error: Content is protected !!