News March 17, 2024

நவ கைலாசங்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்

image

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையோரங்களில், சிவபெருமானின் நவ கைலாச தலங்கள் உள்ளன. முதல்தலம், பாபநாசத்தில் பிரமாண்டமாக உள்ளது. 2 முதல் 9 வரையிலான தலங்கள், சேரன்மாதேவியில் தொடங்கி, சேர்ந்தபூமங்கலம் வரை அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால், சூரியன், சந்திரன், செவ்வாய், குரு உள்ளிட்ட 9 கிரகங்களின் அருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

Similar News

News October 22, 2025

இந்தியா மீதான USA வரி குறைகிறதா?

image

இந்தியா – USA இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதன் படி, அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கும் வரிகள் தற்போதுள்ள 50% இலிருந்து 15–16% ஆக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்து, USA-ன் சோளம் & சோயா உணவுப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News October 22, 2025

BREAKING: கனமழை வெளுக்கும்.. வந்தது ரெட் அலர்ட்

image

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

கேரளாவின் முயற்சியை தமிழகம் முறியடிக்கணும்: TTV

image

முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று கேரள அரசு பிடிவாதம் பிடிப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவின் சில அமைப்புகளும் இதே மனப்பான்மையில் வதந்திகளை பரப்பி வருவதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க, தமிழக அரசு சட்ட ரீதியாக முயற்சிகளை மேற்கொண்டு, கேரள அரசின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!