News August 22, 2025

ஆறுமுகனாக காட்சி தரும் விநாயகர்!

image

தம்பி ஆறுமுகம் போலவே, அண்ணன் விநாயகரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆறு முகங்களுடன் சண்முகா நதிக்கரையில் காட்சி தருகிறார். சூரனை வீழ்த்திவிட்டு, உக்கிரத்துடன் இருந்த முருகனின் கோபத்தை தணிக்க, ஆறுமுகத்துடன் காட்சி தந்து சிரிக்க வைத்தாராம் விநாயகர். இதனால், விநாயகர் ஆறுமுகத்துடன் காட்சி தருகிறார். இங்கு வந்து விநாயகரை வழிபட்டால், சகல பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.

Similar News

News March 5, 2026

காங்., ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு

image

திமுக கூட்டணியில் காங்., ராஜ்யசபா வேட்பாளராக அகில இந்திய காங்., செயலாளர் <<19300451>>கிறிஸ்டோபர் திலக்<<>> அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 1 ராஜ்யசபா சீட் காங்.,க்கு நேற்று ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் மனு தாக்கல் செய்யவுள்ளார். மார்ச் 16-ல் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிகவில் சுதீஷ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

News March 5, 2026

மா.செ.க்களிடம் தனித்தனியாக ஆலோசித்த இபிஎஸ்

image

அதிமுக மா.செ.க்களை தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்து EPS ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக, இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை மா.செ.களிடம் கொடுத்து, யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்டிருக்கிறார். மேலும், தெருமுனை கூட்டணிகளை நடத்துவதோடு, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து, திமுகவிற்கு எதிரான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அறிவுறுத்தியிருக்கிறார்.

News March 5, 2026

ராஜ்யசபா வேட்பாளராக அன்புமணி போட்டி

image

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பாமக வேட்பாளராக அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றே வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், காலை 10.30 மணிக்கு அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில் அன்புமணி ராஜ்யசபா MP-யாக இருந்துள்ளார். 2004-ல் திமுக கூட்டணியில் MP & மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

error: Content is protected !!