News August 22, 2025

ஆறுமுகனாக காட்சி தரும் விநாயகர்!

image

தம்பி ஆறுமுகம் போலவே, அண்ணன் விநாயகரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆறு முகங்களுடன் சண்முகா நதிக்கரையில் காட்சி தருகிறார். சூரனை வீழ்த்திவிட்டு, உக்கிரத்துடன் இருந்த முருகனின் கோபத்தை தணிக்க, ஆறுமுகத்துடன் காட்சி தந்து சிரிக்க வைத்தாராம் விநாயகர். இதனால், விநாயகர் ஆறுமுகத்துடன் காட்சி தருகிறார். இங்கு வந்து விநாயகரை வழிபட்டால், சகல பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.

Similar News

News August 22, 2025

தவெக மாநாட்டில் சோகம்.. தொண்டர்கள் மரணம்

image

மதுரை தவெக மாநாட்டிற்கு சென்ற அக்கட்சியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபாகரன்(33) மாநாட்டுக்கு செல்லும் வழியில் சக்கிமங்கலத்தில் உயிரிழந்தார். அதேபோல், மாநாடு முடிந்து நீலகிரி திரும்பி கொண்டிருந்த ரித்திக் ரோஷன்(18) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த ரவி(18) வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News August 22, 2025

பீடிக்காக ஒரு கேமியோவா? ஆமிர் கான் விளக்கம்

image

‘பீடியை பற்ற வைக்கவா பாலிவுட்டில் இருந்து வந்தீர்கள்?’ என்ற கேள்வியை ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஆமிர் கானிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆமிர் கான், கூலி படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைப்பதே தனது வேலை, இதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். மேலும், தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்ற அவர், அவருடன் இணைந்து நடிப்பது பெருமை என்றும் விளக்கமளித்துள்ளார்.

News August 22, 2025

Specified Employee என்றால் யார்?

image

ஒரு நிறுவனத்தின் இயக்குநரே (Director) ‘Specified Employee’ என அழைக்கப்படுகிறார். இவர் கம்பெனியில் கணிசமான பங்குகளை வைத்திருக்க வேண்டும். தான் பணியாற்றும் நிறுவனத்தில் 20% வாக்குரிமையைக் கொண்டிருக்க வேண்டும். இவரது வருமானம் முன்னதாக ₹50,000-க்கு கீழ் இருக்கக்கூடாது என்ற வரைமுறை இருந்தது. இது தற்போது ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவருக்கான <<17479799>>வருமான வரி<<>> சலுகைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!