News August 15, 2024
‘வங்கதேசத்தை பாருங்கள்; சுதந்திரத்தின் அருமை தெரியும்’

உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சந்திரசூட் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சுதந்திரத்தை இன்று நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். சுதந்திரம் இல்லாதபோதுதான், அதன் அருமை தெரியவரும். வங்கதேசத்தை பாருங்கள். அங்கு தற்போது நடப்பதுதான், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது எனக் கூறினார்.
Similar News
News September 18, 2025
கிராமிய வங்கிகளில் 13,217 இடங்கள்.. அப்ளை பண்ணுங்க

கிராமிய வங்கிகளில் 13,217 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆபீஸ் அசிஸ்டென்ட், ஆபிசர் ஸ்கேல்-1, ஸ்கேல்-2 (ஸ்பெஷலிஸ்ட் மேனேஜர்), ஸ்கேல்-2 (ஜெனரல் பேங்கிங்), ஸ்கேல்-3 (சீனியர் மேனேஜர்) பணியிடங்கள் அடங்கும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.ibps.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்.21-ம் தேதி ஆகும்.
News September 18, 2025
கால் பதிக்க முடியாத இடங்கள்

உலகில் சில இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு, ரகசியம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அரசால் தடை செய்யப்பட்டுள்ள சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த கால் பதிக்க முடியாத இடம் ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
செங்கோட்டையன் விவகாரம்: பாஜக புதிய முடிவு

செங்கோட்டையன் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பாஜகவினருக்கு B.L.சந்தோஷ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி விவகாரம், உள்கட்சி பிரச்சனை போன்றவற்றை தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும் எனவும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். முன்னதாக, ஒன்றிணைப்பு விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கருத்தை சுட்டிக் காட்டி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.