News May 15, 2024
சபரிமலையில் தரிசனம் செய்த லோகேஷ் கனகராஜ்

வைகாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக ஐயப்பன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று சபரிமலைக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவரை சூழ்ந்துகொண்டு ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Similar News
News August 24, 2025
இது வெட்கக்கேடு: திமுக அரசுக்கு சீமான் கேள்வி

தூய்மைப் பணியின் போது உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்துக்கு ₹1 கோடி நிதி வழங்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி சீமான் வெளியிட்ட அறிக்கையில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தற்போதும் தொடர்வதாகவும், அதில் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்கு செயல்பாடா? என கேட்டுள்ளார்.
News August 24, 2025
10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை: இபிஎஸ்

திமுக ஆட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் இபிஎஸ் சாடினார். திருவெறும்பூரில் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 10% கூட திமுக நிறைவேற்றவில்லை என்றும், ஆனால் 98% வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக திமுக கூறுவது பொய் என்றார். மேலும், தேர்தலை கணக்கிட்டே 30 லட்சம் மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.
News August 24, 2025
லேடன் தெரியுமா? பின்லேடன்: USA-க்கு நினைவூட்டல்

பாகிஸ்தானுடன், அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் நிலையில், பழைய வரலாற்றை அமெரிக்கா மறந்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தேடிய பயங்கரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் தான் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்காவுக்கு நினைவுப்படுத்த விரும்புவதாக கூறினார். தங்களது வசதிக்கேற்ப அரசியல் செய்வதை இரு நாடுகளுமே விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.