News June 26, 2024

4ஆவது முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல்

image

சுதந்திர இந்தியா வரலாற்றில், மக்களவை சபாநாயகர் பதவிக்கு 3 முறை (1952, 1967, 1976) தேர்தல்கள் நடந்துள்ளன. இதன்பிறகு, தற்போது 4ஆவது முறையாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் தேர்வு விவகாரத்தில், ஆளும் கட்சி – எதிர்க்கட்சி இடையே ஒருமித்த கருத்தே இருந்தது. இந்த முறை, துணை சபாநாயகர் பதவியை காங்., கோரிய நிலையில், பாஜக வாய் திறக்காததால், சபாநாயகர் தேர்தலில் கொடிக்குன்னில் சுரேஷை காங்., களமிறக்கியது.

Similar News

News September 18, 2025

BREAKING: செங்கோட்டையன் நீக்கம்? இபிஎஸ் பதில்

image

செங்கோட்டையனின் பதவி பறிப்பு குறித்து பேசிய EPS, ‘கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அதிமுகவில் வழக்கம்’ என்று விளக்கமளித்தார். அப்போது, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கம் செய்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய எழுப்பினர். அதற்கு, உட்கட்சி பிரச்னையை பொதுவெளியில் பேசமுடியாது என சூசகமாக பதிலளித்தார்.

News September 18, 2025

கர்சீப்பை வைத்து முகத்தை மறைக்கவில்லை: இபிஎஸ்

image

டெல்லியில் அமித்ஷா வீட்டிலிருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைக்கத்தான் செய்தேன்; மறைக்கவில்லை என்று இபிஎஸ் விளக்கமளித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறாக செய்தி வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், இனிமேல் பாத்ரூம் போனால் கூட பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிவிட்டுதான் போக வேண்டிய அரசியல் சூழல் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

News September 18, 2025

வாக்கு திருட்டுக்கு ECI உடந்தை: ராகுல் காந்தி

image

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!