News February 21, 2025
3 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அறிவித்து இருந்தனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும் இன்று, வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவித்துள்ளார். இதனால் மார்ச் 4இல் 3 மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது.
Similar News
News February 22, 2025
IND vs PAK: மிஸ்ட்ரி ஸ்பின்னரை இறக்கும் ரோஹித்..

பெரிதும் எதிர்பார்க்கப்படும் IND vs PAK மேட்ச் நாளை நடைபெறுகிறது. இதில், குல்தீப் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் முதல் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் அவருக்கு பதிலாக அணியில், வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்படலாம் எனப்படுகிறது. அதே போல, ராணாவிற்கு ரெஸ்ட் கொடுத்து அர்ஷ்தீப்பை அணியில் சேர்க்கலாம் என்றும் தகவல் வெளிவருகின்றன. உங்களின் பெஸ்ட் பிளேயிங் XI எது?
News February 22, 2025
புதிதாக 60 கட்சிகள் உதயம்

2024 – 2025இல் நாடு முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், தமிழகத்திலிருந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நமது உரிமை காக்கும் கட்சி, மக்கள் முரசு கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் தற்போது 6 தேசிய கட்சிகள், 58 மாநிலக் கட்சிகள் மற்றும் 2,763 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளது கவனிக்கத்தக்கது. புதிய கட்சிகள் உதயம் குறித்து உங்கள் கருத்து என்ன?
News February 22, 2025
செவ்வாய் கிரகத்தில் வீடு: சென்னை ஐஐடி சாதனை

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? என்ற ஆய்வுகளில் அமெரிக்காவும், இந்தியாவும் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் அமைந்தால் அங்கு கட்டுமானங்களை எழுப்ப பிரத்யேக கான்கிரீட்களை உருவாக்கி சாதித்திருக்கிறது சென்னை ஐஐடி. நீரின்றி தயாரிக்கப்பட்டதுதான் இதன் தனித்துவமே. இதை வைத்து செவ்வாயில் வீடு கட்டினால் எப்படி இருக்கும்? அதை AI தொழில்நுட்பம் நம் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறது.