News February 23, 2025
3 மாவட்டங்களில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மார்ச் 4 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவாரத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். இந்த 3 நாட்களுக்கு பதிலாக முறையே மார்ச் 8, மார்ச் 22, ஏப்ரல் 12 ஆகிய தினங்கள் வேலைநாட்களாக இருக்கும்.
Similar News
News February 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News February 24, 2025
துளசியை இப்படிதான் வழிபட வேண்டும்

கடவுளுக்கு உகந்த செடியான துளசியினை வழிபடுவதற்கு சில முறைகள் உள்ளன. (1) துளசியை வீட்டில் வெயில்படும், சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும் (2) தினமும் காலை குளித்துவிட்டு துளசியின் முன் விளக்கு, ஊதுபத்தி ஏற்றலாம் (3) மந்திரங்களை ஓதியபடி துளசி மாடத்தை சுற்றி வர வேண்டும் (4) துளசிக்கு பூக்களை தூவி பூஜை செய்யலாம் (5) அசுத்தமான கைகளால் துளசி செடியை தொட வேண்டாம்.
News February 24, 2025
திருமணத்தை மீறிய உறவில் இத்தனை வகைகளா!

திருமணத்தை மீறிய உறவுகளை, அவற்றுக்கான காரணங்களின் அடிப்படையில் 8 வகைகளாக பிரித்துள்ளனர்: 1)எமோஷனல் உறவு (உடல் நாட்டமில்லாதது) 2)இன்னொருவர் மீது காதல் கொள்வது 3)ஒருநாள் உறவு 4)தவறான நபரை மணந்து கொண்டோம் என்று நினைத்து வேறொருவர் மீது ஏற்படும் தீவிரக் காதல் 5) செக்ஸுக்கு அடிமையாவதால் ஏற்படும் உறவுகள் 6)பழிவாங்க இன்னொரு உறவை நாடுவது 7)ஆன்லைன் காதல் 8)ஒரு உறவிலிருந்து வெளியேற இன்னொரு உறவை நாடுவது.