News March 2, 2025
5 மாவட்டங்களில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4இல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களிலும் மார்ச் 4ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படாது. அன்று அவற்றுக்கு விடுமுறை.
Similar News
News August 6, 2025
கருண் நாயரின் கெரியர் முடிந்ததா?

ராஞ்சி டிராபியில் 863 ரன்கள் அடித்து, 9 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், IND vs ENG டெஸ்ட் தொடரில் கடுமையாக சொதப்பினார். இந்த தொடரில் வெறும் 205 ரன்களை மட்டுமே எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர், தனது ஃபார்மை நிரூபிக்காததால், தேர்வுக்குழுவும், ரசிகர்களும் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இதனால் அடுத்து அணியில் இடம்பெறுவது கடினம் என்கின்றனர்.
News August 6, 2025
24 மணி நேரத்திற்குள் வரி விதிப்பு: டிரம்ப்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் வரிவிதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா தான் அமெரிக்காவிடம் அதிக வர்த்தகத்தில் ஈடுபடுகிறது, ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை எனவும், இந்தியா ஒரு சிறந்த வர்த்தக கூட்டாளி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கி, உக்ரைன் போரை வளர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News August 6, 2025
அதி நவீன ஏவுகணைகளை களமிறக்க முடிவு

ஆபரேஷன் சிந்தூரின் போது நமது பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட குழு விரைவில் கூட உள்ளது. இந்தியா – ரஷ்யா கூட்டு தயாரிப்பில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன.