News August 6, 2025

தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

image

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி நாளை(ஆக.7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

இறப்பதை விட இருந்து போராட வேண்டும்: சீமான்

image

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் சிவா உயிரிழந்தது மிகுந்த மனவேதனை தந்ததாக சீமான் தெரிவித்துள்ளார். இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட தன்மானத் தீரர்கள் இறந்து போராடுவதை விடவும், இருந்து போராட வேண்டும் என்பதை இனிவரும் தலைமுறையினருக்கு சொல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறந்தவரின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் சீமான் கூறியுள்ளார்.

News March 20, 2026

வரலாற்றில் இன்று

image

➤1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கான்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
➤ 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது
➤1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது.
➤1977 – தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியை தழுவினார்.
➤2020 – நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

News March 20, 2026

அதிமுக MP மீது விசாரணையை தொடங்கிய மகளிர் ஆணையம்

image

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய C.V.சண்முகம் மீது மாநில மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஊடங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் C.V.சண்முகம் MP என்பதால் நாடாளுமன்ற செயலரிடம் புகார் அளிக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க DGP-க்கு பரிந்துரைக்கவும் மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

error: Content is protected !!