News April 10, 2025
நெல்லை, தென்காசிக்கு நாளை உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நாளை (ஏப்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஏப்.26 சனிக்கிழமை அன்று வேலைநாள் என கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். அதேபோல், பங்குனி உத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றமின்றி நடைபெறும்.
Similar News
News November 7, 2025
BREAKING: திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் ரத்து

திருச்செந்தூரிலிருந்து பாலக்காடு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது தினமும் இயங்கி வருகிறது. இந்த ரயிலானது கோவில்பட்டி யார்டில் நடைபெறும் இன்ஜினியரிங் பணி காரணமாக இன்று(நவ.7) மட்டும் விருதுநகரில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் இன்று திருச்செந்தூரில் இருந்து செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
மோதல் போக்கு இருந்தால் நிதி வராது: நயினார்

தமிழகத்திற்கு தேவையான நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தால் நிதி வராது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு நன்மை இல்லை என்று கூறிய அவர், மத்திய – மாநில அரசுகளின் உறவு நன்றாக இருந்தால் தான் மத்திய அரசின் நிதி இங்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News November 7, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை மாரடைப்பால் காலமானார்

பிரபல பாலிவுட் நடிகையும், பாடகியுமான சுலக்ஷனா பண்டிட்(71) மாரடைப்பால் காலமானார். 9 வயதில் மழலை குரலில் பாட தொடங்கியவர், பிறகு பாலிவுட் ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டார். பாடகியாக மட்டுமின்றி, 1970 முதல் 1980-களில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ராஜேஷ் கன்னா, வினோத் கண்ணா, சசி கபூர் போன்றோரின் படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


