News February 25, 2025
5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4இல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவராத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2025
டீ பார்ட்டிகளுக்கு ரூ.1 கோடி செலவிட்ட அமைச்சர்கள்

புதுச்சேரி மாநில அமைச்சர்கள், அரசுப் பணத்தில் செலவிட்டது குறித்து தகவல் அறியும் சமூக செயல்பாட்டாளர் அசோக் ராஜா என்பவர் RTI மூலம் தகவல் பெற்றுள்ளார். அதில் 4 ஆண்டுகளில் டீ பார்ட்டிகளுக்காக ரூ.1 கோடிக்கு மேல் அமைச்சர்கள் செலவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, அமைச்சர்கள் ரூ.41 லட்சத்துக்கு டீ, காபி குடித்து இருப்பதாகவும், ரூ.61 லட்சத்துக்கு பூங்கொத்து வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
News February 25, 2025
வெறும் 3 ஓவரில் சதம்.. உங்களுக்கு தெரியுமா?

கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத சாதனையை ஆஸி., ஜாம்பவான் டான் பிராட்மேன் படைத்துள்ளார் என்பது தெரியுமா? 1931ல் நடந்த உள்நாட்டு போட்டியில் 3 ஓவரில் சதம் அடித்தார். அப்போது ஓவருக்கு 8 பந்துகள். 1st ஓவரில் 33, 2வது ஓவரில் 40, 3வது ஓவரில் 27 ரன்களும் எடுத்து சதத்தை எட்டினார். தற்போது ஓவருக்கு 6 பந்துகள் என்பதால் 3 ஓவரில் சதம் அடிக்க முடியாத நிலை உள்ளது. *இன்று பிராட்மேனின் நினைவுநாள்.
News February 25, 2025
AUS-SA போட்டி கைவிடப்பட்டது

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி மைதானம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால், ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்து வழங்கப்பட்டுள்ளது.