News February 24, 2025
4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4 அன்று தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவராத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். குமரியில் இந்த 3 நாட்களுக்கு பதிலாக முறையே மார்ச் 8, 22 & ஏப்.12 ஆகிய தினங்கள் வேலைநாட்களாக இருக்கும்.
Similar News
News February 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News February 25, 2025
PF பயனாளர்களுக்கு அதிக வட்டி?

PF சந்தாதாரர்களுக்கு இந்த வாரம் இனிப்பான செய்தி ஒன்று வெளியாகவிருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்கான PF வட்டி எவ்வளவு வழங்கலாம் என்று மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபடவுள்ளது. கடந்த ஆண்டு அதிக வட்டியான 8.25% வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டும் அதே அளவு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், முதலீடு செய்யப்பட்ட PF தொகை அதிக லாபம் கொடுத்திருப்பதால் அதிக வட்டிக்கு வாய்ப்புண்டு.
News February 25, 2025
100 நாள் வேலை: நிதி வந்தவுடன் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார். 100 நாள் வேலையில் 86% பெண்களும், 27% தாழ்த்தப்பட்ட சமுதாயனத்தினரும் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பயனாளிகளுக்கான ஊதிய நிலுவை ₹2,400 கோடியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். மத்திய அரசு நிதியை விடுவித்ததும் உடனடியாக அவர்களுக்கு அத்தொகை வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.