News August 5, 2025
சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (ஆகஸ்ட் 6) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், வரும் 23-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News August 6, 2025
தூங்குவதற்கு முன் இதை செய்யுங்க!

பருவமழை காலத்தில் தூங்குவதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீர் அல்லது பானங்களை அருந்த வேண்டாம். அது சளி மற்றும் இருமல் பிரச்னையை ஏற்படுத்தும். உங்கள் பாதங்கள் ஈரமாக இருந்தால், பூஞ்சை தொற்று ஏற்படலாம். அறை ஈரப்பதமாக இருந்தால், பாக்டீரியாக்கள் வளர்ந்து நோய் ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News August 6, 2025
தமிழகம் ஈர்த்த முதலீடுகள் என்ன? எல்.முருகன் கேள்வி

தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு எந்த நிறுவனங்கள் தொழிற்சாலையை தொடங்கின என்பது பற்றி திமுக அரசு அறிவிக்க வேண்டுமென எல்.முருகன் தெரிவித்துள்ளார். அப்போதுதான் எந்தெந்த நிறுவனங்கள் வந்துள்ளன என்பதை மக்கள் அறியமுடியும் என்றார். இல்லையெனில் CM ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் அறிவிப்புகள் வெற்று விளம்பர அறிவிப்புகள் என்பது உறுதியாகும் என்றார்.
News August 6, 2025
ஆணவக் கொலை.. 8 வாரங்களில் விசாரிக்க உத்தரவு

கவின் ஆணவக்கொலை வழக்கை 8 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய CBCID-க்கு மதுரை HC உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதியின் கண்காணிப்பில் இந்த வழக்கை விசாரிக்க கோரி HC-யில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அரசு சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை முறையாக நடைபெறுவதால் மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை எனவும் தெரிவித்தனர்.