News December 22, 2024

28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்.. அரசின் திட்டம் என்ன?

image

வரும் 5ஆம் தேதியுடன் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தனி அதிகாரிகளை நியமிக்க TN அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அவசரச் சட்ட மசோதா வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதிமுக ஆட்சியில் 2016 – 2019 வரை தனி அதிகாரிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 9, 2025

செங்கோட்டையன் புதிய முடிவு.. அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

image

டெல்லியில் FM நிர்மலா சீதாராமனை, கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஒருங்கிணைந்த அதிமுகவாக 2026 தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்று பிற்பகலில் தமிழகம் திரும்பும் செங்கோட்டையன், TTV தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளார். முன்னதாக OPS-ம் செங்கோட்டையனை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

News September 9, 2025

மீண்டும் மறுப்பு.. நீதிமன்றத்தை நாடும் தவெக?

image

தனது பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து துவங்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். இதற்காக போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரசார இடத்தை மாற்ற வேண்டும், பேசும் நேரத்தை குறைக்க வேண்டும், மாற்று சாலைகளில் ரோடு ஷோ செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதாம். இந்நிலையில், இது அரசியல் உள்நோக்கோடு கூறப்படுவதாக கருதும் தவெக, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 9, 2025

தோனியின் ஒன் லைன் மந்திரம் இதுதான்

image

சர்வதேச போட்டிகளில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்றாலும், தோனியின் விளையாட்டு நுட்பங்கள் இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், CSK வீரர் நூர் அகமது தோனி பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ‘சூழ்நிலையை அறிந்துகொண்டு, அதற்கு தேவையானதைச் செய்’ என்றே தோனி அறிவுறுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், IPL-ல் ஆட்ட நாயகன் விருது வென்றதை விட MSD-ன் கீழ் விளையாடியதே சிறந்தது என்றார்.

error: Content is protected !!